கடமலைக்குண்டு, மார்ச் 2- தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றியத்தில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பள வில் தென்னை விவசாயம் நடைபெற்று வரு கிறது. இங்கு உற்பத்தியாகும் தேங்காய் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநி லங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வரு கிறது. கடந்த சில மாதங்களாக கட மலை-மயிலை ஒன்றியத்தில் பெய்த சாரல் மழையின் காரணமாக தற்போது மரங்களில் தேங்காய் உற்பத்தி அதிகரித்து காணப்படு கிறது. உற்பத்தி அதிகரித்ததன் காரணமாக தேங்காய் விலை நாளுக்கு நாள் சரிவை சந்தித்து வருகிறது. கடந்த இரண்டு மாதங்க ளுக்கு முன்பு வரை 1 டன் தேங்காய் 26 ஆயிரம் ரூபாய்க்கும் 1 தேங்காய் 12 ரூபாய் வரையிலும் விற்பனையாகி வந்தது. ஆனால் தற்போது டன் 22 ஆயிரத்திற்கும் 1 தேங்காய் 9 ரூபாய் வரையில் மட்டுமே விற்பனையாகிறது. தொடர்ந்து உற்பத்தி அதிகளவில் காணப்படுவதால் தேங்காய் விலை மேலும் குறையும் நிலை உள்ளது. இதேபோல வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு தேங்காய் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுவதும் விலை குறைவிற்கு காரணம் என விவசாயி கள் தெரிவிக்கின்றனர். இதே போல கட மலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள குடோன்களில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு தென்னை மட்டை கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. அங்கு தென்னை மட்டைகளில் இருந்து நார் பிரித்து எடுக்கப்பட்டு கட்டிகளாக மாற்றப்பட்டு விவ சாய பயன்பாட்டிற்காக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது வெளிநாடுகளுக்கு தென்னை நார் ஏற்றுமதி குறைந்ததால் குடோன்களில் தென்னை மட்டைகள் அதிக அளவில் குவிந்து காணப்படுகிறது. மேலும் தென்னை மட்டைகளின் விலை கடும் வீழ்ச்சிய டைந்துள்ளது. அரசு உரிய நடவடிக்கை எடுத்து தேங்காய்க்கு நிரந்தர விலை நிர்ண யம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.