கம்பம் பகுதியில் அரிசிக்கொம்பன் யானை நடமாடுவதால்,அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து உத்தமபாளையம் கோட்டாட்சியர் ஆணையிட்டுள்ளார்.
தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் அரிசிக்கொம்பன் யானை நடமாடுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
யானை ஊருக்குள் நடமாடுவதால், நகராட்சி நிர்வாகம் சார்பில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று ஒலிப்பெருக்கியில் அறிவிப்பு செய்தனர்.குடியிருப்பு பகுதியில் யானை நடமாடும் நிலையில் மக்கள் தேவையின்றி வெளியே வருவதை தடுக்க 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. ஏற்கனவே 10 பேரின் உயிரை காவு வாங்கிய அரிசிக்கொம்பன் யானையை வனப்பகுதியில் விரட்ட வனத்துறையினர் தொடர் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.