districts

குமுளியில் 17 டன்  ரேசன் அரிசி சிக்கியது

 தேனி, பிப்.8- தமிழக-கேரள எல்லையான குமுளியில் உள்ள தமி ழக காவல்துறை  சோதனைச்சாவடியில் உத்தமபாளை யம் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்  ஆய்வாளர்  சுப்புலட்சுமி தலைமையில் வாகனச் சோதனை யில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மதுரையில் இருந்து குமுளி நோக்கி வந்த லாரியை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.  இதில், அந்த லாரியில் 50 கிலோ வீதம் 340 மூட்டை களில் மொத்தம் 17 டன் ரேசன் அரிசியை கேரளாவுக்கு கடத்திச்செல்வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநரான  கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த ஜான் பாட்ஷா (வயது 33), உடன் வந்த மதுரை தெற்குவெளி வீதியை சேர்ந்த  சீனிவாசன் (54) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்த னர். மேலும் லாரி மற்றும் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய பாலசிங் என்பவரை தேடி வருகின்றனர்.

;