தென்காசி, ஜூன் 20- தென்காசி மாவட்டம் வீ.கே.புதூர் பள்ளியில் 100 யோகாசனம் செய்து கொண்டே 100 திருக்குறளை மனப்பாடமாக ஒப்புவித்து உலக சாதனை படைத்துள்ள மாணவனுக்கு திமுக துணைப் பொதுச்.செயலாளர் கனிமொழி எம்.பி. பாராட்டு தெரிவித்தார்.
தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயிலும் மாணவன் ம.மாதவன், 100 யோகாசனங்கள் செய்து கொண்டே 100 திருக்குறளை மனப்பாடமாக ஒப்புவித்து உலக சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து உலக சாதனை படைத்த மாணவன் மாதவனை, திமுக மாநில துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற குழு தலைவரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி கருணாநிதி நேரில் அழைத்து பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஈ.ராஜா, தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன் மற்றும் சாதனை படைத்துள்ள மாணவன் மாதவனின் பெற்றோர் மருதுபாண்டி, ரேவதி மற்றும் உறவினர்கள் திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ப