districts

img

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு: ஆட்சியர் துவக்கி வைத்தார்

தென்காசி, பிப். 8 தென்காசி மாவட்டம், இ.சி.ஈஸ்வரன்பிள்ளை அரசு மாதிரி ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் புதனன்று  மாவட்ட அளவிலான தமிழ் நாடு முதலமைச்சர் கோப்பை 2022-2023-ஆம்ஆண்டிற் கான விளையாட்டு போட்டி களை  மாவட்ட ஆட்சித்தலை வர் துரை.இரவிச்சந்திரன் துவக்கி வைத்தார். பின்னர், அவர் தெரி வித்ததாவது, புதிதாக உரு வாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தில், அனைத்து துறைகளும் வளர்ச்சி பெறு வதற்காக, அனைத்து பணி களும் நடைபெற்று வரு கிறது. குறிப்பாக, கல்வி துறை யின் மூலம், அனைத்து பள்ளி களிலும் உள்ள மாணவ, மாணவர்களுக்கு வருகின்ற பொதுத்தேர்வினை சிறப்பான முறையில் எதிர் கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைக ளும் எடுக்கப்பட்டு வருகி றது, இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் மூலம், விளை யாட்டு போட்டிகளை ஊக்கு விக்கும் வகையில் 14 பிரிவு களில் விளையாட்டு போட்டி கள் இன்று முதல் தொடங்கி வருகின்ற 20-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.  இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவி யர்களுக்கு மாநில அளவில் நடைபெறும் முதலமைச்சர் விளைாட்டு கோப்பை பரி சாக வழங்கப்பட உள்ளது. அனைத்து போட்டிகளிலும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு அதிக ளவிலான பரிசுகளை தென் காசி மாவட்டத்திற்கு பெற்றுத் தரவேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில், சட்ட மன்ற உறுப்பினர்கள் எஸ். பழனிநாடார் (தென்காசி), ஈ.ராஜா (சங்கரன்கோ வில்) டாக்டர் தி.சதன்திரும லைக்குமார் (வாசுதேவ நல்லூர்), முதன்மை கல்வி அலுவலர் கபீர், மாவட்ட விளையாட்டு மற்றும் இளை ஞர்நலன் அலுவலர் . கு.வினு  பல்வேறுவிளையாட்டு சங்ககங் களின் தலைவர் கள், செயலாளர்கள், அரசு அலுவலர்கள் மற்றும்  மாணவ, மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

;