தென்காசி, ஜூன் 4- புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் க. கிருஷ்ண சாமி, இன்றைய திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம், மசக்கவுண்டர் புதூர் கிரா மத்தைச் சேர்ந்தவர். முது நிலை மருத்துவரான இவர், புதிய தமிழகம் கட்சியின் தலைவராக இருந்து வருகி றார். தூத்துக்குடி மாவட்டத் திலுள்ள கொடியன்குளம், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர் பிரச்சனையில் தலையீடு செய்த பின்னணியில், முக்கி யத் தலைவராக பார்க்கப்பட்டார்.
அதற்கேற்ப, 1996 தேர்த லில் கொடியன்குளம் உள்ள டக்கிய ஒட்டப்பிடாரம் சட்ட மன்றத் தொகுதியில் தனித் துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், 2011-ஆம் ஆண்டில் அதே தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டி யிட்டு வெற்றி பெற்றார். எனி னும், மக்களவைத் தேர்தல் களில் அவருக்கு வெற்றி கிடைத்ததில்லை.
முதன் முறையாக, பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் 1984-ஆம் ஆண்டு போட்டியிட்ட கிருஷ்ணசாமி, அதன்பிறகு, 1996-இல் திருநெல்வேலி, 1998, 1999, 2004, 2009, 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் மீண்டும் மீண்டும் தென்காசி தொகுதியில் கூட்டணி மாறி போட்டியிட்டும் வெற்றி பெற முடியவில்லை.
சமீப காலமாக பாஜக கட்சியுடன் நெருக்கமாக இருந்ததுடன், ஆர்எஸ்எஸ் தலைமையகத்தோடும் நெருங்கிய உறவாடி வந்த டாக்டர் கிருஷ்ணசாமி, பாஜக கட்சியிலேயே இணை வார் என்று எதிர்பார்க்கப் பட்டது.ஆனால், திடீரென பாஜக உடன் முரண்பாடு போல காட்டிக் கொண்ட அவர், அதிமுக கூட்டணியில் இணைந்து, 2024-இல் மக்க ளவைத் தேர்தலில் மீண்டும் தென்காசி தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், இந்த முறையும் அவருக்கு தோல்வியே பரிசாக கிடைத் துள்ளது. மக்களவைத் தேர்த லில் போட்டியிட்ட 9 முறை யும் தோல்வியடைந்த அரசி யல் கட்சித் தலைவர் என்ற மிக மோசமான சாதனைக்கு சொந்தமாகியுள்ளார்.
1996-இல் தனித்தே போட்டியிட்டு வென்ற ஒட்டப் பிடாரம் சட்டமன்றத் தொகுதி யிலும் கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்த லில் வெறும் 6,500 வாக்கு களைப் பெற்று டாக்டர் கிருஷ்ணசாமி படுதோல்வி அடைந்தார் என்பது குறிப்பி டத்தக்கது.