துறைமுகத் தொழிலாளர்களின் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்திருந்த நிலையில், அதற்கு முன்னதாகவே பேச்சு வார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டு உள்ளது.
துறைமுகத் தொழிலாளர்களுக்கு 1.01.2022 முதல் வழங்கப்பட வேண்டிய புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உடனடியாக ஏற்படுத்த வேண்டும்; துறை முகங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்மூடித் தனமான தனியார்மய நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும்; ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் தனி யார் நிறுவனங்களில் பணிசெய்யும் டாக் தொழிலா ளர்களுக்கு துறைமுகத் தொழிலாளர்களுக்கு இணை யான ஊதியம் வழங்க வேண்டும்; துறைமுக மருத்துவ மனைகளை தனியார்மயமாக்கக் கூடாது; துறைமுக ஓய்வூதியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து ஆகஸ்ட் 28 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வதற்கான நோட்டீஸ் அளித்து வேலை நிறுத்த தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வந்தன.
நாட்டின் 12 பெரிய துறைமுகங்களில் போராட்டம்
இந்தியாவின் 12 பெரிய துறைமுகங்களான மும்பை, மும்பை ஜவகர்லால் நேரு, கொல்கத்தா, சென்னை, பாரதீப், கொச்சி, விசாகப்பட்டினம், காண்ட்லா, கோவா, நியூ மங்களூர், தூத்துக்குடி, எண்ணூர் துறை முகங்களில் பணிசெய்யும் தொழிலாளர்களை பிரதி நிதித்துவப்படுத்தும் 5 பெரிய துறைமுக சம்மேளனங்க ளான ஹெச்எம்எஸ், ஹெசிஎம்எஸ்(ஒர்க்கர்ஸ்), சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி சம்மேளனங்கள் இந்தப் போராட்ட ஆயத்தங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இதனிடையே, ஆகஸ்ட் 28 காலை 6 மணி முதல் வேலைநிறுத்தம் தொடங்கும் நிலையில், அதற்கு முன்னதாக ஆகஸ்ட் 27 அன்று காலை 11 மணி முதல் தில்லியில் இந்தியத் துறைமுகக் கூட்டமைப்பின் அதி காரிகள், தொழிற்சங்க சம்மேளனத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இரவு 9 மணி வரை நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன் பாடு ஏற்பட்டது.
உடன்பாடு எட்டப்பட்டது
இந்த உடன்பாட்டின்படி 1.01.2022 முதல் 31.12.2026 வரை 5 ஆண்டு காலத்துக்கு ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும். துறைமுகத் தொழிலாளர்களுக்கு 31.12.2021 தேதியில் வாங்கிய சம்பளத்துடன் 30 சத விகிதம் பஞ்சப்படி சேர்த்து வரும் தொகையில் 8.5 சத விகிதம் பிட்மெண்ட் வழங்கி சம்பளம் மறு நிர்ணயம் செய்யப்படும். பணியில் உள்ள தொழிலா ளர்களுக்கு ஒப்பந்தக் காலம் முழுவதும் மாதம் ரூ. 500 விகிதம் சிறப்பு அலவன்ஸ் வழங்கப்படும். ஊதிய பட்டியல், பென்சன் மறுநிர்ணயம் உள்ளிட்ட அம்சங்கள் ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி கணக்கிடப்படும் என்றும் உடன்பாடு எட்டப்பட்டது.
அத்துடன், ஆகஸ்ட் 28 அன்று மாலை நடை பெறும் பேச்சுவார்த்தையில் இதர அம்சங்கள் பேசி தீர்வு காணப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
இந்த உடன்பாட்டின் அடிப்படையில் தொழிலா ளர் சம்மேளனங்கள் வேலைநிறுத்தத்தை தள்ளி வைப்பதற்கு ஒப்புக் கொண்டன.
பேச்சுவார்த்தையில் எச்.எம்.எஸ், எச்.எம்.எஸ் (ஓர்க்கர்ஸ்), சிஐடியு, ஐஎன்டியுசி, ஏஐடியுசி, பிஎம்எஸ் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடியில் கொண்டாட்டம்
பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து தூத்துக்குடியில் வேலைநிறுத்த தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை தள்ளி வைப்பது என்ற முடிவை அறிவித்து பழைய துறைமுக வாயிலில் ஐஎன்டியுசி சங்க அகில இந்திய அமைப்பு செயலாளர் பி.கதிர்வேல் தலைமையில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
நிகழ்ச்சியில் ஜனநாயக ஊழியர் சங்க (சிஐடியு) தலைவரும் லேபர் டிரஸ்டியுமான எஸ். பால கிருஷ்ணன், பொதுச்செயலாளர் கே. காசி, துணைத் தலைவர் ஆர். ரசல், பொருளாளர் மீனாட்சி சுந்தரே சன், போர்ட் மெரைனர்ஸ் அன்ட் ஜெனரல் ஸ்டாப் யூனியன் எச்எம்எஸ் சார்பில் தலைவர் சுரேஷ், ஆரோக்கியராஜ், பிரான்சிஸ், போர்ட் யுனைடெட் ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியன் எச்எம்எஸ் (ஒர்க்கர்ஸ்) சார்பில் தலைவர் ஜான் கென்னடி, பொதுச்செயலாளர் கிளிங்டன், போர்ட் எம்பிளாயீஸ் டிரேடு யூனியன் பெட்டு சார்பில் பொதுச்செயலாளர் ஓ.கனகராஜ், பால விநாயகம், முத்துமாடசாமி, நேசனல் ஹார்பர் ஒர்க்கர்ஸ் யூனியன் ஐஎன்டியுசி சார்பில் தலைவர் சந்திரசேகரன், பொதுச்செயலாளர் ராஜகோபாலன், பால்ராஜ், வ.உ.சி போர்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் ஏஐடியுசி சார்பில் தலைவர் ஏ.பாலசிங்கம், உதவி தலைவர் லெனின்டன், ராஜ்குமார், போர்ட் ஜெனரல் ஸ்டாப் யூனியன் ஐஎன்டியுசி சார்பில்தலைவர் ஆரோக்கிய சாமி, செயலாளர் பிரவீன், போர்ட் அண்ணா டாக் அன்ட் டிரான்ஸ்போர்ட் ஓர்க்கர்ஸ் யூனியன் சார்பில் தலைவர் சண்முககுமாரி, செயலாளர் முருகேசன் ஆகியோர் பங்கேற்றனர்.
வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்த துறைமுக ஓய்வூதியர் அமைப்புகள், ஒப்பந்த தொழிலா ளர்கள், தனியார் கப்பல் நிறுவனத் தொழிலாளர்கள், கப்பல் நிறுவனங்கள், லாரி உரிமையாளர்கள், லாரி ஓட்டுநர் சங்கங்கள், இந்திய தொழில் வர்த்தகக் கழகம், அகில இந்திய தொழில் வர்த்தகக் கூட்டமைப்பு, தூத்துக்குடி ஸ்டூவிடோரிங் அசோசியேசன் நிர்வாகி கள், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரிய சாமி, அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் அனைவருக்கும் போராட்டக்குழு சார்பில் தொ ழிற்சங்கத்தினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.