தூத்துக்குடி,டிச.11 தூத்துக்குடியில் உலக மாற்றுத்திற னாளிகள் தின விழாவில் 313 பேருக்கு ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி களை கனிமொழி எம்பி வழங்கினார். தூத்துக்குடி தருவை மைதானம் பல் நோக்கு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற அனைத்து நாடுகள் மாற்றுத் திறனாளிகள் தினவிழாவில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கரு ணாநிதி, சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் , மீன் வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பரா மரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித் தார்.