districts

புத்தக கண்காட்சிகளில் பிரெய்லி நூல்கள் இடம் பெற வேண்டுகோள்

தூத்துக்குடி , ஜன. 12 தமிழகத்தில் நடைபெறும் புத்தக கண்காட்சிகளில் பிரெய்லி புத்தகங்கள் இடம் பெற வேண்டும் என தமிழக அரசுக்கு மதர் பைவ் ரோஸ் தொண்டு நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. உலக பிரைய்லி தினத்தை முன் னிட்டு தூத்துக்குடியில் செயல் பட்டு வரும் மதர் பைவ் ரோஸ் தொண்டு நிறுவனம் நெல்லை மற்றும் தூத்துக்குடியில் உள்ள பார்வையற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு மதிய உணவும் நலத்திட்ட உதவிகளும் வழங்கினர். தொடர்ந்து பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு சுய தொழில் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் பண உதவியும் மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு தையல் இயந்திரமும் வழங்கினர். அத்துடன் பார்வையற்ற பள்ளி மாணவிக்கு ஓட்டப்பந்தய விளை யாட்டில் கலந்து கொள்வதற்கு காலணிகள் உள்ளிட்ட உதவிகளை யும்,பள்ளி மாணவிகளுக்கு பார்வைத் திறன் மேம்படுத்துவது குறித்து ஆலோசனையும் வழங்கப் பட்டது. இது குறித்து பார்வை இழந்த மாற்றுத்திறனாளியான ஆண்டனி கூறும் பொழுது “இந்த நிறுவனம் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து இது போன்ற வாழ்வா தாரத்தை உயர்த்தும் உதவிகளை செய்து வருகிறது என்றார். பார்வை யற்றோர் சங்கத்தை சேர்ந்த முரு கேசன் கூறும் பொழுது இந்த அமைப்பு மூலமாக பல்வேறு உதவி களை செய்து வருகின்றனர். அவர்க ளுக்கு  வாழ்த்துக்கள் என்றார். மதர்ஸ் பைவ் ரோஸ் நிறுவன இயக்குனரான முகம்மது ஹயாஸ் கூறும்போது “நாங்கள் தொடர்ந்து  பார்வையற்ற மாற்றுத்திறனாளி களை கண்டறிந்து அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்த தொடர்ந்து பல்வேறு உதவிகள் செய்து வருகின்றோம்.

தமிழக அரசு அனைத்து அரசு அலுவல கங்களிலும் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்துவதற்காக வசதியுடன் கூடிய படிக்கட்டுகளும் கழிப்ப றைகளும் அமைத்திருப்பதற்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். குறிப்பாக பிரெய்லி முறையில் கண்பார்வையற்றவர்கள் தக வலை தெரிந்து கொள்வதற்கும், காது கேளாதவர்கள்  புரிந்து கொள் ளக்கூடிய வகையிலும் அமைக்கப் பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது பாராட்டு தலுக்குரியது என்ற அவர் பார்வை யற்றோர் மேல்படிப்பு படிப்ப தற்கான கல்லூரி இன்ஸ்டியூட் சென்னையில் மட்டுமே இருக் கின்றது. பார்வையற்றோர் பயன் படுத்துவதற்கு வசதியாக தூத்துக் குடியிலும் ஒரு பிரெய்லி தரமான பள்ளிக்கூடம் துவங்க வேண்டும். மேலும் தமிழகத்தில் புத்தக கண்காட்சிகள் நடைபெறும் போது பார்வையற்றோர்களுக்கான பிரெய்லி புத்தகங்களும் வைத்திட வேண்டும். இதனால் பார்வையற்ற வர்களுக்கு தேவையான புத்த கங்கள் கிடைத்திட வாய்ப்பாக அமையும். இதனை தமிழக அரசு கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இந்த நிகழ்ச்சி ஏற்பாடு களை மதர் பைவ் ரோஸ் நிறு வனத்தின் இயக்குனர்களான மருத்துவர் முகம்மது நசீர் மற்றும் முகமது ஹயாஸ் மற்றும் தொண்டு நிறுவனத்தின் செய்திருந்தனர்.