தூத்துக்குடி, ஆக. 12- தூத்துக்குடி - சென்னை இடையே முத்து நகர் விரைவு ரயில் தின சரி இயக்கப்பட்டு வரு கிறது. இந்த ரயிலில் பய ணிகள் கூட்டம் நிரம்பி வழி கிறது. முன்பதிவு இல்லாத பெட்டிகளில் கூட்டம் மிக அதிகமாக காணப்படுகிறது.
நாள்தோறும் நெரிசல்: 21 பெட்டிகளை கொண்ட இந்த ரயிலில் ஏற்கெனவே 4 பொதுப் பெட்டிகள் இருந்தன. ஆனால், இடையில் 3 பெட்டிகளாக குறைக்கப் பட்டு, 3-ம் வகுப்பு குளிர்சாதன வசதி பெட்டி எண்ணிக்கை 4-ஆக அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில் பொதுப் பெட்டிகளில் பயணிகள் அமர்ந்து கூட செல்ல முடியாத அளவுக்கு நெரிசல் காணப்படுவதால், பொதுப் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து முத்துநகர் விரைவு ரயிலில் முன்பதிவு இல்லாத பொதுப் பெட்டிகளின் எண்ணிக்கையை தெற்கு ரயில்வே நிர்வாகம் மீண்டும் 4-ஆக அதி கரித்துள்ளது. மூன்றாம் வகுப்பு குளிர் சாதன வசதி பெட்டிகளில் ஒன்று குறைக்கப் பட்டு, முன்பதிவு இல்லாத ஒரு பொதுப் பெட்டி அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றம் ஆகஸ்ட் 20-ஆம் தேதி யில் இருந்தும், சென்னை- தூத்துக்குடி முத்துநகர் ரயிலில் வரும் 21-ஆம் தேதி யில் இருந்தும் நடைமுறைக்கு வரவுள்ளது.