districts

துறைமுக ஜனநாயக  ஊழியர் சங்க முப்பெரும் விழா

   தூத்துக்குடி,மே 29 தூத்துக்குடி துறைமுகத்தில் மே தின விழா, சங்க 45ஆவது ஆண்டு விழா, துறைமுக டிரஸ்டி தேர்தல் வெற்றி விழா நிகழ்ச்சி தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள துறைமுக ஜனநாயக ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. துறைமுக ஜனநாயக ஊழியர் சங்க அலுவலகத்தில் தாரை தப்பட்டை இசைக்க,  பட்டாசுகள் வெடிக்க, மே தின  பேரணி துவங்கி துறைமுக ஸ்ட்ரைக் திடலில் உள்ள பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் நிறைவு பெற்றது. அதனை தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் துறைமுக ஜனநாயக ஊழியர் சங்க தலைவர் பால கிருஷ்ணன் தலைமை வகித்தார். துறைமுக சங்க உறுப்பி னர்கள் சுதீந்திர குமார், ராஜகுமார், ஆனந்த முருகன், நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுரேஷ் ஆனந்த குமார் வரவேற்புரை ஆற்றினார். சிஐடியு மாநில செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.கே.மகேந்திரன், அகில இந்திய நீர் வழி போக்குவரத்து சம்மேளனம் பொதுச் செயலாளர் நரேந்திர ராவ் மே தின சிறப்புரை ஆற்றினார்கள். இதில் சிஐடியு மாநில செயலா ளர் ரசல், துறைமுக ஓய்வூதியர் சங்க தலைவர் சிவநாகரன்,  துறைமுக ஜனநாயக ஊழியர் சங்க பொது செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, செயலாளர் காசி, சிஐடியு மாவட்ட பொரு ளாளர் அப்பா துரை, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக துறைமுக ஜனநாயக ஊழியர் சங்க பொருளாளர் மீனாட்சி சுந்தரேசன் நன்றியுரை ஆற்றினார்.

;