districts

ஜன.19இல் வேளாண் வளர்ச்சித் திட்ட சிறப்பு முகாம் : ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி,ஜன.17  தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 19ஆம் தேதி  கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் விவசாயம் சார்ந்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தூத்துக்குடி மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 120 கிராம பஞ்சாயத்துக்களில் 2022-23 ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இக்கிராமங்களில் 19.01.2023 வியாழக் கிழமை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் விவசாயிகள் பயனடை யும் பொருட்டு, பல்வேறு விவசாயம் சார்ந்த துறைகள் ஒருங்கிணைந்து, சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இம்முகாமில் விவசாயிகளிடமிருந்து குளத்து வண்டல் மண் எடுக்க  விண்ணப்பம் பெறுதல், பயிர் கடன் வழங்க  விண்ணப் பம் பெறுதல், பயிர் காப்பீடு குறித்து விளக்கு தல், கால்நடைகள் நலம் பேண சிறப்பு முகாம் நடத்துதல் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக் கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை மூலம் செயல்படுத்தும் திட்டங்க ளில் பயனாளிகள் தேர்வு செய்தல் என  பல்வேறு விவசாய வளர்ச்சிக்கு தேவை யான அனைத்து நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்படவுள்ளது.  விவசாயிகள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.