districts

img

அதிகனமழை-வெள்ளத்தால் சேதம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த அதி கனமழை-வெள்ளத்தால் சிறு-குறுந்தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ரூ.100 கோடிக்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டுள்ளது. சிப்காட், சிட்கோ மற்றும் கோரம்பள்ளம் கூட்டுறவு தொழிற்பேட்டை ஆகிய மூன்று தொழிற்பேட்டைகளில் உள்ள சுமார் 150 நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

மழைநீரால் தொழிற்சாலை களில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள், மூலப்  பொருட்கள் மற்றும் விற்பனைக்கு  தயாராக இருந்த பொருட்கள் பெரு மளவில் சேதமடைந்துள்ளன. சேத மான பொருட்கள்- இயந்திரங்க ளால் பலர் நஷ்டத்தை சந்தித்துள்ள னர். ஒரு சிலர் உற்பத்தியை மீண்  டும் தொடங்குவதற்தான சூழல் இல்  லாததால் தவித்து வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பத்து தாலுகாக்களில் 45,160 சிறு மற்றும் குறு தொழில்கள்,  (45,160 யூனிட்கள்), ஐந்து தாலு காக்களில் உள்ள தொழிற்சாலை கள் இயற்கையின் சீற்றத்தைச் சந்  தித்துள்ளன. சேதத்தை மதிப்பிடு வதும், இழப்பை மதிப்பிடுவதும் நடந்து வருகிறது. இழப்பின் அளவு  அதிகமாக என்பது உறுதியானா லும் ஒவ்வொரு யூனிட்டிலும் ஏற் பட்டுள்ள சரியான இழப்பைக் கணக்கிடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

மாப்பிள்ளையூரணியில் உள்ள  பருப்பு மில் ஒன்றின் உரிமையா ளரான எம்.ஷர்மிளா கூறுகையில், “எங்களது ஆலையும் அதைச் சுற்றியுள்ள வீடுகளும் இன்னும்  வெள்ளத்தில் தான் (வெள்ளிக் கிழமை வரை ) மூழ்கியுள்ளன. எங்  கள் நிறுவனம் உயரமான இடத்தில் இருப்பதால், இயந்திரங்கள் மற்  றும் மூலப்பொருட்கள் மழை-வெள்  ளத்தில் தப்பின. ஆனால் இப்போது  வரை தண்ணீர் குறையவில்லை.

மழைநீர் எங்கள் பகுதி முழு வதும் தேங்கி நிற்பதால், தொழிற் சாலையில் இருந்து தண்ணீரை வெளியேற்ற முடியவில்லை. தேங்கிய மழைநீரை அகற்ற அதி காரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க  வில்லை. உற்பத்தி நின்றிருப்பது ஒருபுறம். அதே நேரத்தில் இயந்தி ரங்கள் மற்றும் மூலப்பொருட் களை பாதுகாக்க வேண்டும். ஏனெ னில் இரண்டு நாட்களுக்கு மழை  தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது என் றார்.

தூத்துக்குடி சரக்கு பெட்டக சரக்கு நிலைய சங்கத் தலைவர் ஜே. செலஸ்டீன் வில்லவராயர் கூறுகையில், 16 சரக்கு பெட்டக நிலையங்களில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்காக வைக்கப்பட்டிருந்த கொள்கலன்கள் சேதமடைந் துள்ளன. சுமார் 18 டெப்போக்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த வெற்று கொள்கலன்களும் சேத மடைந்துள்ளன, அவற்றை மறுவடி வமைப்பது மிகவும் கடினமான பணி யாகும் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ஒட்டுமொத்த இழப்பு ரூ.100 கோடிக்கும் அதிகமாக இருக்கும். காப்பீட்டு நிறுவனங்கள் எவ்வளவு இழப்பீடு தருவார்கள் என எங்களுக்குத் தெரியவில்லை என்றார்.

150 நிறுவனங்கள்  கடும் பாதிப்பு
இந்திய வர்த்தக சபைத் தலை வர் கோடீஸ்வரன் கூறுகையில், வரலாறு காணாத மழை பெய்த தால் முன்னெச்சரிக்கை நடவ டிக்கை எடுக்க முடியவில்லை. சிப்  காட், சிட்கோ மற்றும் கோரம்பள்  ளம் கூட்டுறவு தொழிற்பேட்டை ஆகிய மூன்று தொழிற்பேட்டை களில் உள்ள சுமார் 150 நிறுவனங்  கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள் ளன அவை மீண்டும் செயல்பட ஒரு மாதம் ஆகலாம் என்றார்.