தூத்துக்குடி,ஜூன் 13 - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட் கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. மக்கள் குறை தீர்க்கும் நாளில் சுமார் ஆயிரக்கணக்கானோர் தங்கள் கோரிக்கைகள் அடங் கிய மனுவுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகின்றனர். இதில் பெரும் பாலும், வயதானவர்கள், பெண்கள், மாற்றுத்திறனா ளிகள் வருகின்றனர். மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டமானது மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மூன் றாவது தளத்தில் நடை பெற்று வருகிறது. ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டு லிப்ட்கள் உள்ளன, இதில் ஒன்று மிக மிக முக்கிய நபர்கள்( VVIP) மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப் பட்டுள்ளது. ஒரு லிப்ட் மட்டுமே பொதுமக்கள் பயன் பாட்டிற்கு உள்ளது. இதில் ஒரு முறைக்கு 6 நபர்கள் மட்டுமே பயனிக்க முடியும், இதனால் பெரும்பாலும் மனு அளிக்க வரும் மக்கள் படி கட்டில் கால் கடுக்க நின்று மனு அளித்து வருகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி கீழ் தளத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும், மனு அளிக்க வரும் பொதுமக்கள் குடிப்பதற்கு குடிநீர் வசதி செய்து தர வேண்டும், அதேபோல் மனுக்களை பதிவு செய்யும் கவுண்டரில் ஆண்களும், பெண்களும் ஒரே வரிசையில் நின்று செல்லக்கூடிய சூழல் உள்ளது, இதனால் சில நேரங்களில் மனு அளிக்க வரும் பெண்கள் மிகவும் சிர மத்திற்கு ஆளாகி வருகின்ற னர். எனவே மனுக்கள் பதிவு செய்யும் கவுண்டரை ஆண், பெண் என இரு பால ருக்கும் தனியாக பிரித்து வரிசை படுத்த வேண்டும் என இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.