தூத்துக்குடி, டிச. 26 - தூத்துக்குடி மாவட்ட மழை - வெள்ளப் பாதிப்புகள் குறித்து, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் ஆய்வு மேற்கொண்டார்.
டிசம்பர் 17, 18 ஆகிய 2 நாட்கள் பெய்த அதிகனமழையால் தூத்துக் குடி மாநகரின் பெரும்பாலான இடங்களில் மழைநீா் சூழ்ந்தது. குடி யிருப்புகளுக்கும் வெள்ளம் புகுந்த தால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு, அரசியல் கட்சிகள், அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்களின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் தொடர்ந்து, தற்போது நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மேம்பட்டு வருகிறது.
இதனிடையே, தமிழ்நாடு அரசு கோரியபடி மழை வெள்ளப் பாதிப்பை பேரிடராக அறிவிக்க முடியாது என் றும், நிவாரண நிதியை வழங்க மறுத்தும் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியது, தமிழ கத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படு த்தியது. பலரும் அவருக்கு கண்டனங்களைத் தெரிவித்தனர். இதனால், பிரதமர் மோடியே, முதல்வர் மு.க. ஸ்டாலினைத் தொடர்புகொண்டு பேசி சமாதானப்படுத்தினார். அத்து டன், சம்பந்தப்பட்ட நிர்மலா சீதாராம னையே தூத்துக்குடிக்கு ஆய்வுக்கு அனுப்பி வைப்பதாக அறிவித்தார்.
அதன்படி, வாய்த்துடுக்காக பேசி, சர்ச்சையில் சிக்கிய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளச் சேதங்களை பார்வையிட செவ்வாய்க்கிழமை தூத்துக்குடி வந்தார். இங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ள சேதங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தூத்துக் குடி எம்.பி. கனிமொழி, ஒன்றிய இணையமைச்சர் எல். முருகன், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொண்டனர். அவரிடம் வெள்ளப் பாதிப்பு குறித்து அதிகாரிகள் எடுத்துரைத்தனர். அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை நிர்மலா சீதாராமன் நேரில் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடியில் வெள்ளப்பாதிப் பை ஆய்வுசெய்த ஒன்றிய நிதியமை ச்சர் நிர்மலா சீதாராமனிடம் நிவாரண நிதியின் அவசியத்தை வலியுறுத்தி 72 பக்கங்கள் கொண்ட மனுவை அமைச் சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.