தூத்துக்குடி,அக். 23 தூத்துக்குடியில் மாவட்ட நிர்வாகம் சார்பாக “புத்தகத் திரு விழா 2022” நவம்பர் 22 முதல் 30ம் தேதி வரை நடைபெறவுள்ளது. தூத்துக்குடி ஏ.வி.எம். மஹாலில் மாவட்ட நிர்வாகம் சார்பாக நடை பெற உள்ள “புத்தகத் திருவிழா – 2022” தொடர்பான இலச்சினையை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பி னர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் பெஜெகன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண் முகையா, மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலையில் வெளியிட்டார். பின்னர் அவர் பேசுகையில் மாணவ, மாணவியர்கள், இளை ஞர்கள், புத்தக வாசிப்பை விரும்பும் அனைவரும் பயன்பெறும் வகை யில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக இந்தப் புத்தகத் திருவிழா சிறப்பு டன் நடத்திட ஏற்பாடு செய்யப் பட்டு வருகிறது. புத்தகத் திருவிழா தினந்தோறும் காலை 11.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை நடை பெறும். சுமார் 200-க்கும் மேற் பட்ட முன்னணி பதிப்பகங்களின் அரங்குகள் இடம்பெறவுள்ளன. அதேபோல, கலை இலக்கியம் சார்ந்த தகவல்களை அறிந்து பயன்பெற ஏதுவாக சிறப்பு அரங்கு களும் ஏற்படுத்தப்படவுள்ளன. புத்த கம் வாசிப்பது என்பது மிகவும் அற்புதமான பழக்கம். பாடப் புத்தகங்களை தாண்டி பிற துறை சார்ந்த புத்தகங்களை வாசிப்பதன் மூலம் உலக நடப்பு கள், பொருளாதார மாற்றங்கள் உள்ளிட்ட அனைத்து அரிய தகவல் களையும் கற்றறிந்து பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த புத்தக திருவிழாவினை பொது மக்கள், மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள் என அனைவரும் முழு மையாக பயன்படுத்தி புத்தகத் திருவிழாவில் இடம்பெறும் பதிப்ப கங்களின் மதிப்புமிகு புத்தகங்க ளை வாங்கி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரி வித்துள்ளார்.