districts

கூட்டுறவு வங்கியில் ரூ.25 கோடி மோசடி வழக்கு துணைச் செயலர் கைது

தூத்துக்குடி, நவ.13- குரும்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு  வங்கியில் மோசடி செய்த வழக்கில் தலை மறைவாக இருந்த துணைச் செயலர் கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில்  திருச்செந்தூர் கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் மற்றும் சார் பதிவாளர் ஆகியோர் அடங்கிய குழுவினர் நகைக் கடன் தள்ளுபடிக்காக 2021 செப்.8, 13-ல்  ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 548  நகைப் பைகளில் 261 பைகளைக் காண வில்லை என்பதும், வைப்புநிதி இருப்பில் இருப்பதுபோன்று போலிக் கணக்கு உரு வாக்கி ரூ.25கோடி வரை மோசடி நடந்துள்ள தும் தெரியவந்தது. இதுதொடர்பாக வங்கித் தலைவர் முரு கேசப் பாண்டியன், செயலர் தேவராஜ், துணைச் செயலர் ஜான்ஸி சந்திரகாந்தா ஞானபாய் ஆகியோர் பணிநீக்கம் செய்  யப்பட்டனர். இந்த வழக்கில் வங்கித் தலை வர் கைது செய்யப்பட்ட நிலையில், உடல்  நலம் சரியில்லை எனக் கூறி செயலர் தேவ ராஜ் முன்ஜாமீன் பெற்றார். துணைச் செயலர் ஜான்ஸி சந்திரகாந்தா  ஞானபாய் தலைமறைவாக இருந்துவந் தார். இதனிடையே, நீதிமன்றத்தில் அவர்  திங்கள்கிழமை (நவ.14) ஆஜராக வேண்டி யிருந்ததால், மாவட்ட பொருளாதாரக் குற்றப் பிரிவு டிஎஸ்பி குமரேசன்,  ஆய்வாளர் பத்திரகாளி ஆகியோர் அடங்  கிய தனிப் படையினர் தமிழகம் முழுவதும் அவரைத் தேடிவந்தனர். இந்நிலையில், தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள சொகுசு பங்களாவில் அவர் இருப்பதாக பொருளாளதார குற்  றப்பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸார் சென்று, அவரைக் கைது செய்து பாளை யங்கோட்டை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 2ல் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க  மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதை யடுத்து, அவர் திருநெல்வேலி கொக்கிர குளத்தில் உள்ள மகளிர் சிறையில் அடைக்  கப்பட்டார்.

;