மன்னார்குடி, ஜன.17- வாலிபர் சங்கம் மற்றும் தெரு மக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த பொங் கல் விளையாட்டு விழா திரு வாரூர் மாவட்டம் மன்னார் குடி அம்பலக்கார தெரு வில் நடைபெற்றது. இதில் திருக்குறள் போட்டி, எளிய முறை அறிவியல் பரிசோத னைகள், ஓட்டப் பந்தயம், மெதுவாக சைக்கிள் ஓட்டு வது, பானை உடைத்தல், கோலப் போட்டிகள் நடை பெற்றன. விழாவிற்கு டி.ஜெக தீசன் தலைமை வகித்தார். விழாவை வாலிபர் சங்கத் தின் மாவட்டப் பொருளாளர் எம்.டி.கேசவராஜ் துவக்கி வைத்தார். மாவட்டச் செய லாளர் எஸ்.எம்.சலாவுதீன், வழக்குரைஞர் அ.மார்க்ஸ், விவசாயிகள் சங்க நகரச் செயலாளர் ஜி.முத்துக் கிருஷ்ணன், அறிவியல் இயக்க தலைவர் யு.எஸ்.பொன்முடி, கல்வியாளர் முனைவர் எஸ்.அன்பரசு, இரண்டாவது வார்டு கவுன் சிலர் ஜே.பாலா உள்ளிட் டோர் பங்கேற்றனர்.