குடவாசல், டிச.18 - மயிலாடுதுறையிலிருந்து மங்கை நல்லூர், பேரளம், பூந்தோட்டம், இரவாஞ் சேரி, கடமங்குடி, பிலாவடி, வடவேர் வழியாக குடவாசல் வரை தினமும் காலை- மாலை என இருமுறை வந்து செல்லும் 457 என்ற எண் கொண்ட அரசு பேருந்து, கொரோனா காலத்திற்கு பிறகு இயக்கப் படவில்லை. மேற்குறிப்பிட்ட ஊர்களிலிருந்து குடவா சலில் உள்ள பள்ளி, கல்லூரி, மருத்துவ மனை மற்றும் அரசு அலுவலகங்களுக்கு வந்து செல்லும் மக்களுக்கு இப்பேருந்து மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தற்போது இந்த பேருந்து நிறுத்தப்பட்ட தால் பொதுமக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகின்றனர். குறிப்பிட்ட நேரத்திற்கு இவ்வழியாக வேறு எந்த பேருந்தும் கிடை யாது. எனவே நிறுத்தப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்கிட வேண்டும் என திருவா ரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப் பட்ட போக்குவரத்து துறை அலுவலர்களி டம் சிபிஎம் குடவாசல் தெற்கு பகுதி ஒன்றிய குழு செயலாளர் எம்.கோபிநாத் மனு அளித்துள்ளார். இதேபோல் சீதக்கமங்கலம் ஊராட்சி யில் உள்ள வடக்கு ஆதிதிராவிட தெருவில் 15 வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்புக்கு செல்லும் மண்பாதை மிகவும் மோசம டைந்து உள்ளது. எனவே மெயின் சாலையில் இருந்து இந்த குடியிருப்பு பகுதிக்கு இணைப்புச்சாலை அமைத்து தர வேண்டும். தற்போது பெய்த தொடர் மழையால் இந்த மண்பாதை சேறும், சகதியுமாகி புதைகுழி போன்று உள்ளது. உடனடியாக இந்த மண் சாலையை சீர்செய்து தர வேண்டும் எனக் கோரி குடவாசல் வட்டார வளர்ச்சி அலுவல ரிடம் சிபிஎம் சேதினிபுரம் கிளை செயலாளர் முருகையன் மனு அளித்துள்ளார்.