குடவாசல், மார்ச் 6- திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத் தில் உள்ள நெடுங்குளத்தில் 2003 ஆம் ஆண்டு கட்டப்பட்டு இடிந்துவிழும் நிலை யில் உள்ள ஆதிதிராவிட மாணவியர் விடு தியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆய்வு செய்தது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நன்னிலம் ஒன்றிய செய லாளர் கே.எம்.லிங்கம் சனிக்கிழமையன்று நெடுங்குளத்தில் உள்ள அரசினர் மாணவி யர் விடுதிக்கு நேரில் சென்று கள செய் தார். இதில், மாணவியர் தங்கும் விடுதி மிக மோசமான நிலையில் உள்ளதை கண்டார். மேலும் இந்தக் கட்டடம் கடந்த 2003ஆம் ஆண்டுதான் புதிதாக கட்டப்பட்டுள்ளது. கட்டும்போதே தரமற்ற நிலையில் கட்டிய தால் கட்டடம் விரிசல் விட்டு உள்ளது. தற்போது ஒருபுறம் கட்டடம் சாய்ந்து பல இடங்களில் வெடுப்பு உள்ளது. இதனால் விடுதி கட்டடத்தில் தங்கி படிக்க முடியா மல் மாணவிகள் அபாயகரமான நிலை உள்ளது. எனவே, உடனடியாக பழுதடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து புதிதாக விடுதி கட்டடம் கட்ட வேண்டும். தற்காலிகமான மாணவிகள் தங்கிப் படிப்ப தற்கான இடம் தேர்வு செய்து மாணவிகள் தங்கி படிக்கும் வகையில் வசதி செய்து தரவேண்டும். அதேபோல் மாணவிகளுக்கு சமைக் கும் உணவுகளும் தரமின்றி வழங்கப்பட்டு வருகிறது. எனவே, விடுதியில் தங்கியுள்ள மாணவிகளுக்கு சுகாதாரமான முறையில் சமைத்து தரமான உணவு வழங்க வேண்டும். எனவே, மாவட்ட ஆட்சியர் விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகள் நிலையை உணர்ந்து எதுவும் அசம்பாவிதம் நடக்கும் முன்பு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து புதிய விடுதி கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண் டும். இல்லையெனில் மக்களை திரட்டி விடுதி முன்பு கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார். ஆய்வின்போது மாவட்டக் குழு உறுப்பினர் டி.வீர பாண்டியன், மாவட்ட கவுன்சிலர் ஜெ.முகமது உதுமான், நகர செயலாளர் சீனி.ராஜேந்திரன் உள்ளிட் டோர் உடன் சென்றிருந்தனர்.