திருவாரூர் மாவட்டம் நீடாமங்க லம் வருவாய் வட்ட அலுவல கத்தில் கிளை நூலகம் இயங்கி வரு கிறது. இந்த நூலகத்தை அரசு தேர்வு களுக்காக தங்களை தயார் செய்து வரும் ஏழை, எளிய கிராமப்புற இளை ஞர்கள் அன்றாடம் பயன்படுத்தி வரு கின்றனர். இந்நூலகத்தை பயன்படுத்திதான் கடந்த ஆண்டு அரசு தேர்வில் 3 ஏழை தாழ்த்தப்பட்ட குடும்பத்தைச் சார்ந்த இளைஞர்கள் வெற்றி பெற்றனர். கடந்த காலங்களில் ஏராளமான ஏழை, எளிய இளைஞர்களின் அறிவுக் கண்ணை திறந்து அவர்கள் வாழ்க்கை யில் ஒளியேற்றி வைத்த இந்நூல கத்தின் நிலை தற்போது பரிதாபகர மாக மாறி உள்ளது. குறிப்பாக மழைக் காலத்தில் எப்போது இதன் சுவர் இடிந்து விழுமோ என்ற நிலையிலேயே செயல்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 96 நூலகங்களில் கோட்டூர், கூத்தா நல்லூர், வலங்கைமான், பேரளம் என 4 நூலகங்கள் தனியார் கட்டிடத்தில் இயங்குகின்றன. எஞ்சிய நூலகங்கள் சொந்த மற்றும் இலவச கட்டிடங்களில் இயங்குகின்றன. எஞ்சிய கட்டி டங்களில் பெரும்பாலானவை பழுது பார்க்கப்பட வேண்டியவை. இதில், பல நூலகங்கள் இடித்துவிட்டு புதிதாக கட்டப்பட வேண்டியவை. பொது நூலகத்துறையில் நிதி இல்லாததால் அத்தியாவசியமான இந்த பணிகள் நடைபெறாமல் உள்ள தாக நூலகத்துறை வட்டாரத் தக வல்கள் கூறுகின்றன. நீடாமங்கலம் நூலகத்தை பழுது பார்த்து புதுப்பிப்பதற்கு சாத்தியமே இல்லாததால், அதை இடித்துவிட்டு புதிதாகத்தான் கட்ட வேண்டும். மாவட்ட நூலக அலுவலர் ஆண்டாளை தொடர்பு கொண்டு இதுபற்றி கேட்டபோது, நிதி இல்லாததால் இப்பணியை மேற் கொள்ள இயலவில்லை. ஆனால் அதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்றார். பொது நூலகத்துறையின் குறிப் பிட்ட ஒரு நூலகத்தின் மேம்பாடு, பழுது பார்த்தல், மக்கள் தொடர்பு என அனைத் தும் சம்பந்தப்பட்ட கிளை நூலகர்தான் முன் முயற்சி எடுக்க வேண்டும்.
நீடா மங்கலத்திலும் இப்படிப்பட்ட முன் முயற்சிகள் நடைபெற்றுள்ளன. ஆனால், இதற்கான தீர்வு மேல்மட் டத்தில்தான் நிலுவையில் உள்ளது. நீடாமங்கலம் நூலகம் தொடர்ந்து அதே பாழடைந்த கட்டிடத்தில் இயங்கு வது என்பது பாதுகாப்பற்றது மற்றும் அபாயகரமானது. எனவே, போர்க்கால அடிப்படையில் தற்காலிகமாக நூல கத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டி யது மிகவும் அவசியமானதாகும். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஜான் கென்னடி கூறும்போது, ‘‘இப் போது உள்ள கட்டிடத்தில் நூலகம் தொடர்ந்து இயங்குவது சாத்தியமற் றது. தற்காலிகமாக சார்நிலை கருவூ லத்திற்கு நேர் எதிரே கூரை வேயப்பட்ட கட்டிடம் உள்ளது. அந்த இடத்திற்கு உடனே மாற்ற வேண்டும். இதை வலி யுறுத்தி நீடாமங்கலம் நகரத்திலும் கிரா மங்களிலும் கையெழுத்து இயக்கம் நடத்துவதற்கு முடிவு செய்துள் ளோம்’’ என்றார். தமிழ்நாடு முழுவதும் எல்லா மாவட்டங்களிலும் புத்தகத் திரு விழா கண்காட்சிகள் நடைபெற்று வரு கின்றன. வாசிப்பையும் படைப்பாளி களையும் ஊக்குவிப்பதற்காக நடத் தப்படும் இப்புத்தகத் திருவிழாக்கள் கண்காட்சிகள் எந்த அளவிற்கு முக்கி யமானவையோ அதே அளவிற்கு நூலகங்களை பராமரிப்பதும் மேம் படுத்துவதும் முக்கியமானதாகும். நூலகங்கள் அறிவு கண்களை திறக்கும் திறவுகோல்கள் என்பதில் சந்தேகம் இல்லை. பரிதாபகரமான நிலையில் உள்ள நீடாமங்கலம் கிளை நூலகம் எப்போது புத்துயிர் பெறும். இதில், பேரூராட்சி, மாவட்ட நிர்வா கம், பொது நூலகத்துறை ஆகியவை உடனே நடவடிக்கை எடுக்க வேண் டும். இதுவே நீடாமங்கலம் பகுதி மக்க ளின் எதிர்பார்ப்பாகும். - நீடா சுப்பையா