திருவாரூர், ஏப்.2- திருவாரூர் மாவட்டம் குடவாசல் பேரூ ராட்சி பகுதியில் 15 வார்டுகள் உள்ளன. பேரூ ராட்சி வார்டு பகுதியில் மற்றும் சாலை ஓரங்களில் பேரூராட்சி சார்பாக அமைக்கப் பட்டுள்ள குடிநீர் இணைப்பு பைப்புகள் சுகாதாரமற்ற முறையிலும் பள்ளத்திலும் அமைந்துள்ளது. இதனால் குடிநீர் குழாயில் குடிநீரை பயன்படுத்தும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். சாலை விரிவாக்கத்தின் காரணமாக சில இடங்களில் குடிநீர் குழாய்கள் பள்ளத் தில் இருப்பதால் பாத்திரத்தில் தண்ணீர் பிடிப்பது மிகவும் சிரமமாக உள்ளது. சிமெண்ட் தளம் அமைத்தும், குடிநீர் குழாயை உயரமாக்கக் கோரி பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் இதுநாள் வரை சீரமைக்கவில்லை. தற் போது கடுமையான வெயில் காலம் என்ப தால் தண்ணீர் தேவைக்கு குடிநீரை பயன் படுத்தும் பொதுமக்கள் தண்ணீரை எடுக்க மிகவும் அவதிப்படுவதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். எனவே, உடனடியாக பேரூராட்சி நிர்வா கம் அனைத்து குடிநீர் பைப் குழாய் பகுதி களையும் ஆய்வு செய்து சிமெண்ட் தளம் அமைத்து பள்ளத்தில் உள்ள குடிநீர் குழாய்களை சீர் செய்ய வேண்டும் என பொதுமக்களின் வேண்டுகோளாகவுள் ளது.