திருவாரூர், ஏப்.15 - உள்ளாட்சிகளில் பணிபுரியும் ஊழி யர்களின் சம்பளம் மற்றும் நிலுவைத் தொகை தொடர்பான கோரிக்கைகளை குறிப்பிட்டு திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கே.கோவிந்தராஜ் செவ்வாயன்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். அம்மனுவில், பெரும்பாலான கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குநர்களுக்கு தமிழக அரசு நிர்ணயித்த சம்பளம் வழங் கப்படாமல் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.600 வரை வழங்கப்படுகிறது. அதுவும் மாதந்தோறும் சரிவர வழங்கப்படுவ தில்லை. நிதி இல்லை என காரணம் சொல்லி அரசு அறிவித்த நிலுவைத் தொகையும் வழங்கப்படுவதில்லை. இதுபோலவே, தூய்மைக் காவலர்க ளுக்கும் மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததால் நேரடியாக ஊராட் சிகள் மூலம் சம்பளம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் அரசு நிர்ண யித்த அடிப்படையில் நிலுவைத்தொ கையும் உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். உள்ளாட்சி ஊழியர் களின் இத்தகைய கோரிக்கைகளை ஏற்கனவே அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களிடமும் ஊராட்சிக்கான உதவி இயக்குநரிடமும் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளனர்.