திருவாரூர், மே 16 - தமிழ்நாடு அரசின் நகர்ப்புற உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரும் திருச்சியின் பிரபல தொழில திபருமான கே.என்.ராமஜெயம் கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி மர்ம நபர்களால் கடத்தி கொடூரமான முறை யில் கொலை செய்யப்பட்டார். பத்து ஆண்டுகள் கடந்த நிலை யிலும், தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழலிலும் வழக்கு விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. “கொலையாளிகள் குறித்து சரியான தகவல் அளிப்பவர் களுக்கு 50 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் மற்றும் துப்பு கொடுப்பவர்களின் ரகசியம் காக்கப்படும்” என திருச்சி சிபிசிஐடி தனிப்பிரிவு காவல்துறை தெரிவித்துள்ளது. தொடர்பு கொள்வதற்கென 7708322289 என்ற தொலைபேசி எண்ணும் sitcbcidtri@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி யும் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விளம்பர சுவரொட்டி கள் திருவாரூர் நகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன.