districts

img

சிபிஎம் - விவசாயிகள் இயக்கத்தின் மூத்த தலைவர் தோழர் கோ.வீரய்யனுக்கு நினைவஞ்சலி

குடவாசல், நவ.18 -  திருவாரூர் மாவட்டம் குட வாசல் ஒன்றியத்தில் அமைந் துள்ள சித்தாடி கிராமத்தில் அமைந்துள்ள தோழர் கோ. வீரையன் நினைவிடத்தில் நான்காம் ஆண்டு நினைவு தின  மலரஞ்சலி நிகழ்ச்சி வெள்ளிக் கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சாமி.நட ராஜன், அகில இந்திய விவசாய  தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்த லிங்கம், சிபிஎம் மாநில குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்ட செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி, தஞ்சை மாவட்ட செய லாளர் சின்னை.பாண்டியன் ஆகி யோர் அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் மற்றும் தஞ்சை மாவட்ட  குழு உறுப்பினர்கள், திருவா ரூர், நன்னிலம், குடவாசல், வலங்கைமான், திருத்துறைப் பூண்டி, மன்னார்குடி ஒன்றியச் செயலாளர்கள், நகரச் செயலா ளர்கள், மாவட்ட குழு உறுப்பினர் கள் பலர் அஞ்சலி செலுத்தினர்.
சிறப்பு பேரவை
உழைப்பாளி வர்க்கத்தின் ஒப்பற்ற தலைவர் கோ.வீரையன் நினைவு தின சிறப்பு பேரவை  குடவாசலில் உள்ள மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத் தில் நடைபெற்றது. சிபிஎம் மூத்த தலைவர் டி.அய்யாறு வகித்தார். குடவாசல் ஒன்றியத்திலிருந்து 10  பேர் மற்றும் குடவாசல் நகர பகுதி யில் இருந்து 25 பேர் என 35 பேர்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில்  இணைந்தனர். கட்சியில் இணைந்தவர்களுக்கு சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி செந்துண்டு அணிவித்து உறுப்பினர் கார்டு வழங்கி சிறப்பு ரையாற்றினார். முன்னதாக தமிழ்நாடு விவ சாய சங்கத்தின் மாவட்ட செயலா ளர் எம்.சேகர், தலைவர் எஸ்.தம்பு சாமி, விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.குமரராஜா, சிஐடியு மாவட்ட செயலாளர் டி.முருகையன், தீண் டாமை தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் எஸ்.தமிழ்மணி, மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பா.ஆனந்த், வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சலாவுதீன், தலைவர் ஏ.கே.வே லவன் மற்றும் மாவட்ட குழு உறுப் பினர்கள் நினைவஞ்சலி செலுத்தி னர்.
மன்னார்குடி
தோழர் ஜீ.வீரையன் உருவப் படத்திற்கு விவசாயிகள் சங்க நகரத் தலைவர் எஸ்.ஏகாம்பரம் மாலை அணிவித்தார். கட்சியின்  மூத்த தலைவர் கே.டி.கந்த சாமி, ஒன்றியச் செயலாளர் க. ஜெயபால், வி.ச. பொருளாளர் ஜி.மாரிமுத்து, தமுஎகச செய லாளர் தியாக.சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.
புதுக்கோட்டை
முதுபெரும் தலைவர் கோ. வீரையனின் 4 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சிபிஎம்  புதுக்கோட்டை அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. விதொச மாநிலப் பொருளாளர் எஸ்.சங்கர், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.மதி யழகன், மாவட்டக்குழு உறுப்பினர் கள் சி.ஜீவானந்தம், டி.சலோமி, எஸ்.பாண்டிச்செல்வி உள்ளிட் டோர் பங்கேற்றனர்.
தஞ்சாவூர்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மூத்த தலைவர் கோ.வீரை யனின் 4 ஆம் ஆண்டு நினைவு  தினத்தை முன்னிட்டு, கணபதி  நகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி, தஞ்சை மாவட்டக்குழு அலு வலகத்தில் வெள்ளிக்கிழமை அன்னாரது உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி  நடைபெற்றது. மாவட்டச் செயற் குழு உறுப்பினர்கள் கோ.நீல மேகம், ஆர்.மனோகரன், பி. செந்தில்குமார், எஸ்.தமிழ்ச் செல்வி, மாவட்டக்குழு உறுப்பி னர்கள் எம்.மாலதி, என்.குரு சாமி, என்.சரவணன், மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன், மாநகரக்குழு வி.கரிகாலன், சி.ரா ஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருவிடைமருதூர்
கட்சியின் திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய அலுவலகத்தில் தோழர் ஜி.வீரையன் நினை வஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய செயலாளர் என்.பி நா கேந்திரன் தலைமை வகித்தார். தோழர் ஜி.வி படத்திற்கு மூத்த தலைவர் ஜெகன்நாதன், ஒன்றிய குழு உறுப்பினர்கள், மாதர் சங்கத் தலைவர் அம்சவல்லி, தரைக்கடை சங்க தலைவர் ராஜ், ரமேஷ் ஆகியோர் அஞ்சலி  செலுத்தினர்.

;