districts

img

திருவாரூர் அரசு மருத்துவமனை நிர்வாகச் சீர்கேடுகளை கண்டித்து பேரணி-ஆர்ப்பாட்டம் காவல் துணை கண்காணிப்பாளர் அராஜகம்

திருவாரூர், ஆக.31 - திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நிர்வாகச் சீர்கேட்டை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருவாரூர் மாவட்டக் குழு சார்பாக சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம்-பேரணி நடைபெற்றது.

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், காலியாக உள்ள மருத்துவர் மற்றும் செவிலியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அவசர சிகிச்சை பிரிவில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திட பயிற்சி மருத்துவர்களுக்கு மாற்றாக, தலைமை மருத்துவர்கள் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். பிரசவத்தில் ஆண் குழந்தைக்கு ரூ.3000, பெண் குழந்தைக்கு ரூ.1500 என கையூட்டு பெறும் அவலநிலை மற்றும் நிர்வாகச் சீர்கேட்டை கண்டித்து, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை நோக்கி பேரணியாக சென்று மருத்துவக் கல்லூரி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னதாக மருத்துவமனையில் நிர்வாகச் சீர்கேடு மிகுந்துள்ளதை கண்டித்து, வாலிபர் சங்கத்தின் சார்பாக முறையாக அறிவிக்கப்பட்டு, திருவாரூர் விளமல் கல்பாலம் அருகிலிருந்து பேரணி துவங்க தயாரானது.

துணைக் கண்காணிப்பாளரின் குயுக்தியும் குரூரமும்

பேரணி புறப்படும் இடத்திற்கு வந்த திருவாரூர் துணை காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன், பேரணியை சீர்குலைக்கும் நோக்கத்தில், பேரணிக்கு அனுமதி இல்லை என கூறி பேரிகார்டை வைத்து தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், ‘நான்கு சக்கர வாகனத்தில் ஏறி மருத்துவமனைக்குச் சென்று போராட்டம் நடத்திக் கொள்ளுங்கள்’ எனக் கூறி பேரணிக்கு வந்திருந்த போராட்டக்காரர்களை, நான்கு சக்கர வாகனத்தில் அதட்டி உருட்டி ஏற்றினார்.

இதனால் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போராட்டக்காரர்களின் நான்கு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, வாகனத்தில் செல்ல முடியாத வகையில் பேரணியை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார். போராட்டக்காரர்கள் பேரிகார்டை அகற்றிவிட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டவாறு பேரணியாக சென்று மருத்துவக் கல்லூரி வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். 

ஆர்ப்பாட்டத்தில் வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எம்.எஸ்.ஜெய்கிஷ், செயலாளர் ஏ.கே.வேலவன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் பா.சுகதேவ் மற்றும் பலர் கண்டன உரையாற்றினர். மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் கோரிக்கையை விளக்கியும், காவல்துறையின் அராஜக முறையை கண்டித்தும் உரையாற்றி போராட்டத்தை நிறைவு செய்தார். சங்கத்தின் ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.

காவல் துணை கண்காணிப்பாளரின் அராஜக செயலுக்கு சிபிஎம் கண்டனம்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருவா ரூர் மாவட்டக் குழு சார்பாக ஜனநாயக முறையில் மருத்துவக் கல்லூரி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து,  மக்கள் ஆதரவுடன் போராட்டம்-பேரணி நடை பெற்றது. 

இதனை சீர்குலைக்கும் வகையில் திருவா ரூர் மாவட்ட துணை கண்காணிப்பாளர் மணி கண்டன் அராஜகமாக செயல்பட்டு, பேரணியை திட்டமிட்டு சீர்குலைத்து கலவரத்தை உண்டாக் கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும், ஜனநா யக முறையில் போராட்டத்தில் பங்கேற்ற மகிளஞ்சே ரியைச் சேர்ந்த குரு மற்றும் திருமீஞ்சூரைச் சேர்ந்த அருணேசன் என்ற இளைஞர்களை கடுமை யாகத் தாக்கி அவர்களின் ஆடைகளை கிழித்து உள்ளார்.

குரு என்ற இளைஞரின் தோள்பட்டையில், பேரி கார்டை வைத்து அழுத்தியதில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஜனநாயக முறையில் நடந்த  போராட்டத்தில் கலவரத்தை உண்டாக்கி போராட்டக் காரர்களை தாக்கியதால், போராட்டக்காரர்களுக்கும் காவல்துறைக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

அராஜகமான முறையில் செயல்பட்ட மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மணிகண்டனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு வன்மையான கண்டனத்தை தெரி வித்துள்ளது. துணை காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சியின்  மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை யில் தெரிவித்துள்ளார்.