districts

img

திருவாரூர் மாவட்ட தடகள வீரர் பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்பு

திருவாரூர், ஆக. 2- திருவாரூர் மாவட்டம், நன்னிலம் ஒன்றியம் பேரளம் பேரூராட்சி பகுதி யைச் சேர்ந்தவர் தடகள வீரர் ராஜேஷ்  ரமேஷ் (24). இவர், கடந்த ஆண்டு சீனா வில் நடைபெற்ற தெற்காசிய தடகளப்  போட்டியில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றவர்.

கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற  ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று, கலப்பு  400 மீட்டர் தொடர்  ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்க மும், ஆண்கள் 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கமும் வென்று திருவாரூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தவர். 

இந்நிலையில், தற்போது பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் தடகளப் பிரி வில் தமிழ்நாட்டில் இருந்து ஐந்து வீரர்கள் பங்கேற்கின்றனர்.

அதில் பேரளத்தைச் சேர்ந்த ராஜேஷ் ரமேஷ் பங்கேற்கிறார். டெல்டா மாவட்டமான திருவாரூரைச் சேர்ந்த  இளைஞர், ஒலிம்பிக் போட்டிக்கு சென்றிருப்பது மாவட்ட மக்களுக்கு பெருமையை ஏற்படுத்தியுள்ளது.