districts

img

சிஐடியு அமைப்பு தின சிறப்பு பேரவை

திருவாரூர், ஜுன் 9 - சிஐடியு அமைப்பு தின சிறப்பு பேரவை கூட்டம், சிஐடியு திருவாருர் மாவட்டக் குழு சார்பாக பழைய பேருந்து நிலையம் அருகில் சனிக்கிழமை நடைபெற்றது. பேரவைக்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் டி. முருகையன் தலைமை வகித் தார்.

மாவட்டத் தலைவர் எம். கே.என்.அனிபா முன் னிலை வகித்தார். சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் துவக்க உரையாற்றினார்.

“தேசம் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காட்டும் தீர்வு” என்ற தலைப் பில் சிஐடியு மாநிலத் தலை வர் அ.சவுந்தரராசன் சிறப்பு ரையாற்றினார். முன்னதாக 2024 ஆம்  கல்வியாண்டில் அரசு மேல் நிலைப் பள்ளி தேர்வில் 581/600 மதிப்பெண் பெற்ற மாணவி பி.அபிராமி, மாநில அளவில் நடை பெற்ற வில்வித்தை போட்டி யில் முதல் பரிசு தங்கம் வென்ற ஜி.சாந்தன் மற்றும் அரசு போக்குவரத்து கழக  போக்குவரத்து தொழிலா ளர் சங்கத்தின் திருவாரூர் கிளையில் பணியாற்றி பணி  ஓய்வு பெற்ற சிஐடியு மாவட்ட துணைத் தலைவர்  எம்.அம்பேத்கார், கிளை நிர்வாகிகள் டி.வி.பன்னீர் செல்வம், எஸ்.ஜெயசந்தர்  ஆகியோரை பாராட்டி  வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

பேரவையில் நிர்மல் பள்ளிக்கு நன்கொடை வழங்கப்பட்டது. சிஐ டியு செய்தி மாத இதழ்  500-க்கான சந்தா தொகை  ரூ.80,000-ஐ, காசோலை யாக மாநிலத் தலைவர் அ. சவுந்தரராசனிடம் மாவட்டப்  பொருளாளர் இரா.மாலதி வழங்கினார்.  சிபிஎம் செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பி னர்கள், சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் ஏ.பிரேமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.