districts

img

உத்தமர்களைப் போல் பேசி மக்களை ஏமாற்றும் பாஜக

திருவாரூர், ஏப்.12 - தேர்தல் களத்தில் பாஜகவினர் உத்தமர்களைப் போல் பேசி மக்களை ஏமாற்றுகின்றனர் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய பொதுச் செயலா ளர் து.ராஜா.

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாகை நாடாளு மன்ற வேட்பாளர் வை.செல்வராஜுவுக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்குகள் சேகரித்து திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி காமராஜர் சிலை அருகில் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டம் நடை பெற்றது.

இதில், து.ராஜா பங்கேற்று வேட்பாளர் வை.செல்வ ராஜூவுக்கு ஆதரவாக வாக்குச் சேகரித்து உரை யாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், “பாஜக ஆட்சி, நாடாளுமன்றத்தில் அதிக எண்ணிக்கையில் இருப்பதால், எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெரித்து, வாக்கெடுப்பு இல்லாமல் தன்னிச்சையாக அவசரச் சட்டங்களை அமல்படுத்தியது. விவசா யிகளை வஞ்சிக்கும் மூன்று விவசாய வேளாண் சட்டங்க ளை நிறைவேற்றியதை எதிர்த்து, தில்லியில் 18 மாதம் இடைவிடாமல் விவசாயிகள் போராடினர். இதைக் கண்டு அஞ்சிய மோடி, பொய் வாக்குறுதிகளை அளித்து போராட்டத்தை நிறுத்தினார். ஆனால் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததால், மீண்டும் தற்போது வரை விவசாயிகள், இளை ஞர்கள், மாணவர்கள் போராடி வருகின்றனர்.

கொரோனா பெருந்தொற்று நேரத்தில்கூட கார்ப்ப ரேட் முதலாளிகளின் முதலீட்டை விரிவுபடுத்தி, அவர்க ளின் சொத்து மதிப்பை அதிகப்படுத்திய பாசிச மோடி  ஆட்சியை நாடு கண்டுள்ளது. ‘ஊழலை ஒழிப்போம்’  என்று உத்தமர்கள் போல் குரல் கொடுத்து வந்த மோடியின் பொய் பிம்பம் உடைந்து நொறுங்கியுள் ளது. உலக மகா தேர்தல் பத்திர ஊழலில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளால் கண்டனத்திற்கு ஆளான பாசிச பாஜகவினர், தேர்தல் களத்தில் உத்தமர்களைப் போல் பேசி மக்களை ஏமாற்றுகின்றனர். 

எனவே, மக்கள் நாகை நாடாளுமன்றத் தொகுதி யில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் வை.செல்வ ராஜுவுக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்களித்து மிகப் பெரிய வெற்றியை வழங்க வேண்டும்” என்றார்.

பொதுக் கூட்டத்தில் சிபிஐ மாநில தலைவர்க ளில் ஒருவரான கோ.பழனிசாமி, திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து, சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் மற்றும் திமுக, காங்கி ரஸ், மதிமுக, விசிகஉள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.