districts

இளைஞர் ரமேஷ் மரணத்தில் நீடிக்கும் மர்மம் நீதி கிடைக்கும் வரை தொடர் நடவடிக்கை: சிபிஎம்

திருவாரூர், ஏப்.18 - திருவாரூர் வட்டம் அலிவலம் ஊராட்சியில் வசித்து வருபவர் ஆர்.கனகவள்ளி. இவரது கணவர் எம்.ரமேஷ் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 29  ஆம் தேதியன்று நன்னிலம் வட்டம் ஆண்டிப்பந்தல் அருகே மர்மமான முறையில் உயிரிழந்தார். இவருக்கு ஆர்.கிஷோர் (7), ஆர்.ஹரிவர்ஷன்(1) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.  குடும்பத்தின் ஆதாரமாக விளங்கிய  கணவரின் மரணத்தால் நிலை குலைந்து போன கனகவள்ளி தனக்கு நியாயம் கேட்டு தொடர்ந்து போராடி வரு கிறார். இவருக்கு ஆதரவாக மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கள ஆய்வில் இறங்கியுள்ளது. இப்பிரச்சனையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் செயல்பட்டுள்ள நன்னிலம் காவல் துறை குறித்தும், மாவட்ட காவல் கண்கா ணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள் ளது.

சிபிஎம் தலையீடு
இச்சூழலில் கட்சியின் மாநிலக் குழு  உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், திருவா ரூர் ஒன்றிய செயலாளர் என்.இடும்பை யன், திருமருகல் ஒன்றிய முன்னாள் செயலாளர் எம்.ஜெயபால் ஆகியோர் திங்கட்கிழமை (ஏப்.18) பாக்கம் கோட்டூர் ஜமாத் நிர்வாகிகள் எம்.இ. முகமது உஸ்மான் (தலைவர்), எஸ்.கே.டி.செய்யது முபாரக் (செயலாளர்), எம்.சர்புதீன் (பொருளாளர்) ஆகி யோரை நேரில் சந்தித்து சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். மேலும் ரமேஷின் உயிரிழப்பிற்கு காரணமான பாக்கம் கோட்டூரைச் சேர்ந்த என்.முகமது முஸ்தபா, எம். முகமது மாலிக் ஆகியோர் வெளிநாட் டிற்கு தப்பிச்சென்ற நிலையில் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து கண வனை இழந்து குழந்தைகளுடன் சிரமப் படும் கனகவள்ளியின் துயர நிலை குறித்து தெரிவித்தனர். மேற்கண்ட நபர்கள் வெளிநாடு தப்பிச் செல்ல உதவி புரிந்த அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் எஸ்.பஜ்ரூல் ஹக், ஊரில் இல்லாத நிலையில் அவரை சந்திக்க இயலவில்லை.  பின்னர் இப்பிரச்சனையில் மேல்  நடவடிக்கை குறித்து ஜமாத் நிர்வாகி களுடன் சிபிஎம் தலைவர்கள் ஆலோ சனை நடத்தினர். உயிரிழந்த ரமேஷின் குடும்பத்திற்கு நீதி கிடைப்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எடுக்கும்  நடவடிக்கைகளுக்கு ஜமாத் நிர்வாகம் துணையாக இருக்கும் என்று இக்கூட்டத் தில் உறுதியளித்தனர்.  இதன் பிறகு மாநிலக்குழு உறுப்பி னர் ஐ.வி.நாகராஜன் கூறுகையில், இப்பிரச்சனையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரைச் சந்தித்து மீண்டும் புகார் அளித்து முறையிடுவதுடன் நாகை, மயிலாடுதுறை, திருவாரூர்  மாவட்ட அளவில் கட்சி அணிகளோடு கலந்து பேசி போராட்டங்களை முன்னெ டுக்கவும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணையோடு நீதிக் கான போராட்டத்தை துரிதப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அலிவலம் ஆர்.கனகவள்ளி குடும்பத் திற்கு உரிய நீதி கிடைத்திட தொடர் நட வடிக்கைகளில் கட்சி ஈடுபடும் எனவும் தெரிவித்தார்.