districts

img

நியாயவிலைக் கடை அமைத்து தர வலியுறுத்தி கிராம மக்களுடன் போராட்டம்: சிபிஎம் அறிவிப்பு

திருவாரூர், மார்ச் 22- திருவாரூர் ஒன்றியத் திற்கு உட்பட்ட புதுப்பத்தூர் பகுதியில் நியாயவிலைக் கடை அமைத்து தர வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சி, கிராம மக்கள் சார்பில் போராட்டம் நடத்தப் படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. புதுப்பத்தூர் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரு கின்றனர். இவர்களில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளனர். இவர்களின் வாழ்வாதார தேவையான நியாய விலை  கடையினை புதுப்பத்தூர் பகுதியில் புதிதாக அமைத்து தர பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் அரசு செவிசாய்க்கவில்லை.  இந்நிலையில், மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுப்பத்தூர் கிளை சார்பில் கிளைச் செயலாளர் அமிர்த லிங்கம் தலைமையில் பொதுமக்களிடமும் கட்சி நிர்வாகிகளிடமும் பிரச்ச னைகள் குறித்து ஆலோ சிக்கப்பட்டது. ஆலோசனை யின்போது, புதுப்பத்தூர் பகு தியில் புதிய நியாய விலை கடை அமைக்க வலியுறுத்தி பொதுமக்களுடன் இணை ந்து போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில், கட்சி யின் மாநிலக் குழு உறுப்பி னர் ஐ.வி.நாகராஜன், திரு வாரூர் ஒன்றியச் செயலாளர் என்.இடும்பையன், ஆர்.எஸ்.சுந்தர்ரய, வானதீபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.