திருவாரூர், மார்ச் 30- ஒன்றுபட்ட நாகை மாவட்ட சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினராக வும், விவசாயிகள் சங்கத் தின் மாவட்டத் தலைவ ராகவும் செயல்பட்ட மறைந்த தோழர் வி.பழனி வேலின் துணைவியார் சாரதாம்பாள் வயது முதிர்வு காரணமாக கொரடாச்சேரி ஒன்றியம், குளிக்கரையில் புதன்கிழமை காலமானார். அம்மையாரின் மறைவு செய்தி அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம். சேகர், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.தம்பு சாமி, கே.சீனிவாசன், ஒன்றி யச் செயலாளர் டி.ஜெயபால் ஆகியோர் சாரதாம்பாள் உட லுக்கு அஞ்சலி செலுத்தினர். வியாழக்கிழமை நடை பெற்ற இறுதி அஞ்சலி யில் ஒன்றியக் குழு உறுப்பி னர்கள், கிளை செயலாளர் கள் மற்றும் கட்சித் தோழர் கள் பங்கேற்றனர்.