மன்னார்குடி, டிச.18 - திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளியில் திருவாடுதுறை ஆதீ னத்தின் சார்பில் சைவ சித்தாந்த நேரடி பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நகரக் குழு கடும் கண்ட னம் தெரிவித்துள்ளது இதுகுறித்து கட்சியின் நகரச் செய லாளர் ஜி.தாயுமானவன் கூறுகையில், “மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளி யில் ஞாயிற்றுக்கிழமை (டிச.18) சைவ சித்தாந்த நேரடி பயிற்சி முகாம் என்ற பெய ரில் ‘மத பயிற்சி முகாம்’ நடைபெறுவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. தமிழக அரசு அறிவித்த கல்வித்துறை கொள்கை நிலைப் பாடுகளுக்கு இது முற்றிலும் விரோத மானது. மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளி நிர்வாகத்தின் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வித்துறையையும் தமிழக அரசையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரக் குழு கேட்டுக் கொள்கிறது. இப்பள்ளி கடந்த காலங்களில் ‘சமஸ்கிருத பாரதி’ என்ற பெயரில் பாரத மாதா படத்தை வைத்து விளக்குகள் ஏற்றி பூஜைகளுடன் சமஸ்கிருத மொழி ஆராதனை வகுப்புகள் நடத்த ஒரு சில மாதங்களுக்கு அனுமதி அளித்திருந்ததும், இது மொழி பயிற்சி மற்றும் மொழி பிரச்சாரத்திற்கு அப்பால், இந்துத்துவா பிரச்சார நிகழ்ச்சிகளாக நடத்தப்பட்டிருப்பதும் தெரிய வருகிறது. மதப் பிரச்சார கூடாரமாக ஒரு அரசு உதவி பெறும் பள்ளி மன்னார்குடியில் இயங்கு வது கண்டிக்கத்தக்கது. தமிழக அரசும் மாவட்ட கல்வித்துறை நிர்வாகமும் தாமத மின்றி பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியுள்ளார்.