districts

img

காப்பீட்டில் காசில்லா மருத்துவத்தை உறுதிப்படுத்த ஓய்வூதியர்கள் வலியுறுத்தல்

திருவாரூர், டிச.3 - அனைத்து ஓய்வூதியர் சங்கங்க ளின் கூட்டமைப்பினர் செவ்வா யன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 70 வயது முடிந்த ஓய்வூ தியர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம்  வழங்க வேண்டும். தமிழக அரசில்  பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் களுக்கும், பொதுத் துறையி லிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.7850/- வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீடு நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும். காப்பீட்டில் காசில்லா  மருத்துவம் என்பதை உறுதிப் படுத்த வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் செவ்வாயன்று மாநிலம்  தழுவிய போராட்டம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு அமைப்பின் கூட்டமைப்பு தலைவர் எம்.சண் முகம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் வீ.முனி யன் வரவேற்றார். மாநிலச் செயலா ளர் குரு.சந்திரசேகரன் கோரிக்கை களை விளக்கி கண்டன உரை யாற்றினார், தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜி.குமார் நன்றி கூறினார்.

திருச்சிராப்பள்ளி

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற போராட்டத்திற்கு கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் சிராஜுதீன் தலைமை வகித்தார். 

தஞ்சாவூர்

தஞ்சாவூர் பனகல் கட்டிடம்  முன்பு நடைபெற்ற போராட்டத் திற்கு மாவட்டத் தலைவர் டி.  கோவிந்தராஜ் தலைமை வகித்தார்.  மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழ் மணி கோரிக்கை விளக்க உரை யாற்றினார். மத்திய, மாநில அரசு  மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர்  சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ந.குருசாமி துவக்க உரையாற்றினார். மாநி லச் செயற்குழு உறுப்பினர் ஆர். ராஜகோபாலன் நிறைவுரையாற்றி னார். 

கரூர்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற போராட் டத்திற்கு தலைமை குழு உறுப்பி னர் து.சாமுவேல் சுந்தரபாண்டி யன், வீ.சுந்தரகணேசன், கே.வெள் ளையன், எம்.ராஜமாணிக்கம் ஆகி யோர் தலைமை வகித்தனர். சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம் சிறப்புரையாற்றி னார். 

இந்தப் போராட்டங்களில் பல்வேறு துறை சார்ந்த சங்கத்தின் மாநில, மாவட்டத் தலைவர்கள், நிர்வாகிகள் உரையாற்றினர்.