திருவாரூர், டிச.15- திருத்துறைப்பூண்டி-நாகை செல்லும் சாலையில் விபத்துக்களை தவிர்க்க ரவுண்டானா அமைத்து தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐவி.நாகராஜன் தெரிவித்துள்ளதாவது: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டியில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலை உள் ளது. திருத்துறைப்பூண்டி நகரத்திலிருந்து கிழக்கு கடற்கரை சாலை இணையும் இடத்தில் இராமநாதபுரம், திருச்செந்தூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருவனந்த புரம், கொச்சின் உள்ளிட்ட பிற மாவட்டங்க ளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந் தும் ஏராளமான வாகனங்கள் வருகின்றன. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. திருத்துறைப்பூண்டியில் இருந்து செல்லும் வாகனங்கள் கிழக்கு கடற்கரை சாலை இணையும் இடத்தில் போகும் போது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. விபத்து களை தவிர்க்க கிழக்கு கடற்கரை சாலை இணையும் இடத்தில் ரவுண்டானா அமைத்து 3 புறங்களிலும் வேகத்தடை அமைத்து தானியங்கி சோலார் மின் விளக்குகள் பொருத்த வேண்டும். இராமநாதபுரம், மற்றும் பட்டுக் கோட்டை, முத்துப்பேட்டை ஆகிய பகுதி யில் இருந்து வரும் வாகனங்கள் வேளாங் கண்ணி, நாகப்பட்டினம் செல்ல திரும்பும் போது விபத்து ஏற்படுகின்றன. எனவே அந்த இடத்தில் ரவுண்டானா அமைத்து போதிய விழிப்புணர்வு பலகைகள் வைக்க வேண்டும். கொறுக்கை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் மாணவ- மாணவிகள் இங்கிருந்து தான் பேருந்துகளில் செல்கின்றனர். எனவே இப்பகுதியில் உடனடியாக ரவுண்டானா அமைத்து 3 புறங்களிலும் வேகத்தடை அமைத்து போதிய சோலார் விளக்குகள் வைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.