districts

img

60 ஆண்டுகளாக கண்ணன்மேடு பகுதியில் வசிக்கும் ஏழை மக்களின் குடியிருப்புகள் இடித்து அகற்றம் சிபிஎம், சிபிஐ சாலை மறியல்

குடவாசல், அக். 28-  திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தலைக்காடு கிராமத்தில் உள்ள கண்ணன் மேடு பகுதி யில் 50, 60 வருடங்களாக வசித்த குடியிருப்பு வீடு களை இடித்ததை கண்டித்து  சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி ஒன்றியம் தலைக்காடு கிரா மத்தில் உள்ள கண்ணன் மேடு பகுதியில் வசிக்கும் 107 குடியிருப்பு வாசிகளுக்கு மாற்று இடத்திற்கான பட்டா வழங்காமல், எந்தவித அடிப்படை வசதிகளின்றியும் வயல்கள் மற்றும் தனி நபர் இடத்தில் மாற்று இடத்தை அரசு வழங்கி உள்ளது. குடியிருக்க முடியாத இடத்தில் அரசு வழங்கிய இடம் உள்ள நிலையில், திடீ ரென வியாழக்கிழமை கண்ணன்மேடு பகுதியில் வசித்த ஏழை, எளிய மக்க ளின் குடியிருப்புகளை மாவட்ட நிர்வாகம் பொக் லைன் இயந்திரம் கொண்டு அகற்றியதை கண்டித்து சிபிஐ, சிபிஎம் கட்சியின் சார்பாக  சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகத்தை  கண்டித்து திருத்துறைப் பூண்டி - நாகப்பட்டினம் கடற் கரை சாலையில்  மறியல்  ஈடுபட்ட சிபிஐ திருத்துறைப் பூண்டி சட்டமன்ற உறுப்பி னர் க.மாரிமுத்து, சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் ஆகியோர் மற்றும் கட்சிகளின் ஒன்றிய, நகரப் பொறுப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட னர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் கட்சித்  தலைவர்களிடம் அரசு அலு வலர்கள் நடத்திய பேச்சு வார்த்தைப் பின் இரவு 9 மணி அளவில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து சிபிஐ, சிபிஎம் கட்சியின் சார் பாக மாவட்ட முழுவதும் 14 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் நன்னிலம் ஒன்றியம் பேரளத்தில் நடைபெற்ற சாலை மறியலில் போராட் டத்திற்கு சிபிஎம் நன்னிலம் ஒன்றிய செயலாளர் கே.எம்.லிங்கம் தலைமை வகித் தார், மாவட்ட குழு உறுப்பி னர் ஜெ.முகமது உதுமான், ஒன்றியகுழு உறுப்பினர்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். வலங்கைமான் ஒன்றி யம் ஆலங்குடியில் நடை பெற்ற மறியலுக்கு சிபிஐ ஒன்றிய செயலாளர் செந்தில் குமார், சிபிஎம் ஒன்றிய செய லாளர் என்.ராதா ஆகியோர் தலைமை வகித்தனர்.