districts

img

தீக்கதிர் 10 ஆண்டு சந்தாக்கள் வழங்கல்

திருவாரூர், ஜூன் 23 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டக் குழு சார்பாக தீக்கதிர் சிறப்பு பேரவைக்கூட்டம் நன்னிலம் ஒன்றியம் பேரளத்தில் நடை பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட  செயற்குழு உறுப்பினர் சி. ஜோதிபாசு  தலைமை வகித்தார். மாவட்டச்செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி ஜூலை 1 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை நடைபெறும் தீக்கதிர் சந்தா சேர்ப்பு மக்கள் சந்திப்பு இயக் கத்தை விளக்கிப் பேசினார். 

மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் உரையாற்றினார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. நிகழ்வில் சிஐடியு மாவட்ட இணைப்பு சங்கத்தின் சார்பாக, முதல் கட்டமாக தீக்கதிர் நாளிதழுக்கு 10 ஆண்டு சந்தாக்களுக்கான தொகையை காசோலையாக மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தியிடம் சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் வழங்கினர்.