திருவாரூர், ஜூன் 27 - திருவாரூர் மாவட்டம் அலிவலம் பகுதி யைச் சேர்ந்த கனகவள்ளியின் கணவர் ரமேஷ் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 29 அன்று நன்னிலம் வட்டம் ஆண்டிபந்தல் அருகே சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை அவசர கதியில் வழக்கை முடித்ததோடு மர ணத்தில் தொடர்புடைய முகமது மாலிக், முகமது முஸ்தபா ஆகியோர் வெளிநாடு செல்ல வாய்ப்பளித்ததாக நன்னிலம் காவல் துறை ஆய்வாளர் சுகுணாதேவி மீது கனக வள்ளி குடும்பத்தினருக்கு சந்தேகம் எழுந்தது. இச்சம்பவம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் தலைமையில், நேரில் சென்று விவரங்கள் சேகரிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட கனகவள்ளிக்கு ஆதரவாக இவ்வழக்கினை மறு விசாரணை செய்யக் கோரி அப்போதைய மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் விஜயகுமாரிடம் மனு அளிக்கப் பட்டிருந்தது. அவர் மூலம் நன்னிலம் டிஎஸ்பி அ.இளங்கோவனுக்கு மறு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து இவ்வழக்கில் காவல் துறை எவ்வித முனைப்பும் காட்டாத நிலை யில், கடந்த ஜூன் 14 அன்று மாதர் சங்கத்தின் சார்பில் நன்னிலம் காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மறுவிசாரணை செய்வதாக டிஎஸ்பி உத்தரவாதம் அளித்திருந் தார். இந்நிலையில் இன்னும் முறையாக விசாரணை செய்யாமலும் சம்பந்தப்பட்ட ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்காம லும் இருக்கும் காவல்துறையின் அணுகு முறையைக் குறிப்பிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி.சுரேஷ்குமாரை, உயிரிழந்த ரமேஷின் மனைவி கனகவள்ளி மீண்டும் சந்தித்து மனு அளித்துள்ளார். இச்சந்திப்பின் போது சிபிஎம் ஒன்றியச் செயலாளர் என்.இடும்பையன் உடனிருந்தார்.