districts

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கான உயர்கல்வி தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்திடுக! தமிழ்நாடு அரசிற்கு மாணவர் சங்கம் கோரிக்கை

திருவாரூர், பிப்.24- ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கான மாநில அரசின் உயர்கல்வி சிறப்பு போஸ்ட் மெட்ரிக் திட்டத்தின் மூலம் விண் ணப்பிக்க தமிழ்நாடு அரசு கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தின் திருவாரூர் மாவட்டக்குழு கேட்டுகொண்டுள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பா.ஆனந்த்  விடுத்துள்ள அறிக்கையில், ‘‘ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான ஒன்றிய அரசின் நிதி பங்கீட்டுடன் செயல் படுத்தப்படும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டமும் மாநில அரசின் உயர்கல்வி சிறப்பு போஸ்ட் மெட்ரிக் திட்டமும் ஏழை, எளிய மாணவர்களுக்கு பயனளிக் கும் தலையாய திட்டங்களாக்கும். இத்திட்டங்கள் ஒன்றிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியே செயல்படுத்தப்படும்.

தற்போது ஒன்றிய அரசின் நிதி பங்கீட்டுடன், மாநில அரசின் உயர் கல்வித்துறையும் இணைந்து செயல்படுவதன் மூலம் தமிழ்நாட் டில் எஸ்சி/எஸ்டி மாணவர்களுக் கான உதவித்தொகைகளை சற்று  கூடுதலாகவே கொடுக்க முடியும். அதே சமயத்தில் மாணவர்க ளுக்கான 2022-2023 கல்வி ஆண்டில் முதல் இத்திட்டங்களை செயல்படுத்த https://tnadtw scholarship.tn.gov.in என்ற புதிய இணையதளத்தில் மூலம் ஜனவரி 30 முதல் பிப்ரவரி 28 வரை பதிவு செய்யலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.  ஆனால் தற்போது வரையி லும் மாநிலம் முழுவதும் வெறும் 68,413 மாணவர்கள், அதாவது 25 சத வீதமான மாணவர்கள் மட்டுமே  கல்வி உதவிக்கான விண்ணப் பத்தை பதிவு செய்துள்ளனர். மீதம் 85 சதவீதமான மாணவர்கள் விண்ணப்பிக்க முடியவில்லை.  பெரும்பாலான மாணவர்கள் ஆதார் கார்டு உடன் தொடர்பு எண்ணை இணைத்திருக்க வேண்டும், ஆதார் கார்டு உடன் வங்கி கணக்கு எண்ணை இணைத் திருக்க வேண்டும், புதிய சாதி சான்றிதழ் மற்றும் அந்த சாதி சான்றிதழில் புகைப்படத்துடன் எண்களும் இருக்க வேண்டும் உள்ளிட்ட காரணங்களால் விண் ணப்பிக்க முடியவில்லை. ஏற்கெனவே ஒன்றிய அரசாங் கம் கல்விக்கான நிதியை ஆண்டு தோறும் குறைத்துக் கொண்டே வரு கிறது. இதில் பதிவு செய்யமுடி யாத மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைக்குமா? கிடைக்காதா? என்கிற மிகப்பெரிய கேள்விக்குறி எழுகிறது. எனவே உடனடியாக ஏழை, எளிய மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு கால அவகாசத்தை மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு செய்ய வேண்டும்’’ என கூறியிருந்தார்.