திருவாரூர், ஜன. 14- நாட்டில் போதைப் பொருள் பயன்பாட்டினை முற்றிலுமாக குறைத்திடும் நோக்கில் ஒன்றிய அரசின் சமூக நீதி மற்றும் அதி காரமளித்தல் அமைச்சகத் தால் கடைபிடிக்கப்படும் ‘நாஷா முக்த் பாரத் அபியான்’ எனும் பிரச்சாரத் தில் போதைப்பொருள் பயன் பாடு தொடர்பான விழிப்பு ணர்வு ஏற்படுத்திட முன்னாள் படைவீரர்கள் தன்னார்வ லர்களாக பயன்படுத்தப்பட உள்ளனர். இதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் தங்களின் மாவட்ட முன் னாள் படைவீரர் நல அலுவ லகத்தை தொடர்பு கொண்டு விருப்பத்தை தெரிவிக்கலாம். மேலும் விவரங்களுக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலக இணைப்பு கட்டிடத்தில் இயங்கிவரும் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி மூலமோ (04366 290080) தொ டர்பு கொள்ளலாம் என திரு வாரூர் மாவட்ட ஆட்சியர் ப. காயத்ரி கிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.