திருவாரூர், மே 10 - திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள காவ னூர் கிராமத்தைச் சேர்ந்த வர் மதுசூதனன் (42). இவர் குடவாசல் ஒகை பகுதியில் ஜெராக்ஸ் கடை வைத்துள் ளார். பாஜகவின் விவசாய அணியில் மாவட்டப் பொறுப் பாளராக இருந்தவர்.
இவ ருக்கும், திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கருக்கும் இடையே, நாடாளுமன்றத் தேர்தலின்போது, பூத் கமிட்டி பணத்தைப் பிரிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வியாழக் கிழமை இரவு குடவாசல் ஓகை பாலம் அருகே உள்ள தனது கடை அருகே நின்று கொண்டி ருந்த மதுசூதனனை 2 மோட் டார் சைக்கிளில் வந்த 4 பேர் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில், தலையில் படு பயங்கரமாக வெட்டுப்பட்ட மது சூதனன் தற்போது மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், மதுசூதன னின் மனைவி ஹரிணி, குடவா சல் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், பாஜக மாவட்டத் பாஸ்கர் உத்த ரவின் பேரிலும், செந்திலரசன் தூண்டுதலின் பேரிலும் தான் தனது கணவர் மீதான கொலை முயற்சி சம்பவம் நடைபெற்றுள் ளது என புகாரில்தெரிவித்தார்.
இதன்பேரில் பாஸ்கர், செந் திலரசன் மற்றும் அடையாளம் தெரியாத 4 பேர் உட்பட 6 பேர் மீது கொலை முயற்சி, கொலை க்குத் தூண்டுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரணை நட த்திய போலீசார், இச்சம்பவத் தில் 2 பேரை வெள்ளிக்கிழமை யன்று கைது செய்துள்ளனர்.