districts

img

தடம் எண்.457 பேருந்தை மீண்டும் இயக்குக! பிலவாடியில் சிபிஎம் சாலை மறியல்

திருவாரூர், ஜூன் 25 - மயிலாடு துறையி லிருந்து பூந்தோட்டம், எர வாஞ்சேரி, பிலாவடி வழி யாக குடவாசல் வந்து செல் லும் தடம் எண்:457 பேருந்தை  மீண்டும் இயக்க வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் குடவாசல் ஒன்றியக் குழு சார்பில் சாலை மறியல் போராட்டம்  நடைபெற்றது. 

கும்பகோணத்தில் இருந்து நாச்சியார்கோவில் - நன்னிலம் சாலையில் உள்ள பிலவாடி கடைவீதி யில், செவ்வாயன்று சாலை மறியல் நடைபெற்றது.

போராட்டத்திற்கு மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் தலைமை வகித்தார். குடவாசல் தெற்கு ஒன்றியச் செயலா ளர் ம.கோபிநாத், நகரச் செய லாளர் டி.ஜி.சேகர் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.வீரபாண்டியன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எப்.கெரக்கோரியா, ஆர்.லட்சுமி  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கடந்த காலங்களில் மயி லாடுதுறையிலிருந்து குட வாசல் வரை அரசு பேருந்து  தடம் எண்:457 இயக்கப் பட்டது. இப்பேருந்து கடந்த  ஒரு வருடமாக மேற்கண்ட  வழித்தடத்தில் இயக்கப்பட வில்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் உட்பட அனை வரும் சிரமப்படுகின்றனர். எனவே, ஏற்கனவே இயக்கிய  தடம் எண்:457 பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த  நன்னிலம் உதவி காவல் கண்காணிப்பாளர் மற்றும்  போக்குவரத்து அதிகாரி கள், மக்களின் நியாயமான கோரிக்கையை 10 நாளில் நிறைவேற்றுவதாக உறுதி யளித்தனர். இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.