மன்னார்குடி, நவ.30- திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகர்மன்ற 7-ஆவது வார்டு உறுப்பி னராக பொன்.பக்கிரி செல் வம் உள்ளார். இவர், சின்ன கூத்தாநல்லூர் ஏ.ஆர்.சாலை சந்திப்பில் அடிக்கடி விபத்து நடைபெறுவதாக வும் அந்த இடத்தில் வேகத் தடை ஏற்படுத்தப்பட வேண் டும் என்றும் நகர்மன்ற கூட் டங்களில் பலமுறை கூறியுள் ளார். ஆனால், அந்த இடத்தில் வேகத் தடை ஏற்படுத்தப்பட வில்லை. இதுதொடர்பாக நக ராட்சி ஆணையரிடம் 14.10. 2022 அன்று நேரில் மனு கொடுத்தும் வேகத்தடை அமைக்கப்படவில்லை. மேலும் நவம்பர் 28 அன்று மாவட்ட ஆட்சியருக்கு கடித மும் எழுதியுள்ளார். எனவே, அப்பகுதியில் விபத்து ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்பு வேகத்தடை அமைக்கக் கோரி தொடர்ந்து வாட்ஸ் அப் தளத்தில் செய்தி வெளி யிடுவது என முடிவு செய்து போராடி வருகிறார். இப் போராட்டம் நவம்பர் 30 அன்று 6-ஆவது நாளை எட்டியுள்ளது. இதுகுறித்து சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர் கே.டி.எம்.நூர்முகம்மது கூறுகையில், ‘‘அந்த இடம் ஒரு சிக்கலான இடம். எனவே, இங்கு கட்டாயம் வேகத் தடை ஏற்படுத்த வேண்டும். அவரது கோரிக்கை நியாய மானது என்றார்.