திருவாரூர், ஜூலை 16 - உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரியில் தண்ணீர் திறந்து விட வலி யுறுத்தி விவசாய சங்கங்கள் ரயில் மறியல் போராட்டம் நடத்தின.
கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு இந்த மாத இறுதி வரை தினமும் ஒரு டி.எம்.சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என காவிரி நீர் ஒழுங்காற்று குழு கர்நாடக அரசிற்கு உத்தரவிட்டு உள்ளது. ஆனால் அங்கு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டிய கர்நாடக அரசு, அதில் எடுத்த முடிவின் படி 8000 கன அடி நீர்தான் திறந்து விடுவோம் என கர்நாடக முதலமைச்சர் தெரிவித்து உள்ளார்.
இதற்கு தமிழகத்தில் உள்ள விவசாய அமைப்புகள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கண்ட னம் தெரிவித்துள்ளனர். மேட்டூர் அணையில் குடிநீர் தேவைக்குகூட போதிய நீர் இல்லாத நிலையில், கர்நாடக அரசின் அறிவிப்பால் டெல்டா மாவட்ட விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படு வார்கள். ஏற்கனவே குறுவை சாகுபடி செய்ய முடியாத நிலையில் தமிழகத் திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை தர மறுப்பதால் சம்பா சாகுபடியும் மேற் கொள்ள முடியாத நிலை ஏற்படும். எனவே காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவின்படி தமிழகத்திற்கு தேவை யான தண்ணீரை திறந்து விட வேண் டும் என விவசாயிகள் சங்கத்தினரும், அரசியல் கட்சிகளும் கோரிக்கை வைத்து வருகின்றன.
இதனிடையே காவிரி விவகாரத்தில் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கும் கர்நாடக அரசையும், ஒன்றிய அரசை யும் கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கங்கள் சார்பில் செவ்வாயன்று டெல்டா மாவட்டங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
திருவாரூர்
திருவாரூரில் நடந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசி லாமணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் மாநிலச் செயலாளர் பி.டில்லிபாபு ஆகியோர் தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் திருச்சி-காரைக்குடி ரயிலை மறித்தனர்.
மறியலில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறை கைது செய்தனர். மறியல் போராட்டத்தில் அகில இந்திய விவசா யத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.கந்தசாமி, விவசாயிகள் சங்க மாநிலக் குழு உறுப்பினர் கே.தமிழ்ச்செல்வி, சிபிஐ மாவட்டச் செய லாளர் (பொ) கேசவராஜ், விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் கே.முருகேசன் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருத்துறைப்பூண்டியில் நடந்த போராட்டத்திற்கு திருத்துறைப்பூண்டி சிபிஐ சட்டமன்ற உறுப்பினர் க.மாரி முத்து மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் எஸ். சாமிநாதன், எம்.ஜெயபிரகாஷ் ஆகி யோர் தலைமை வகித்தனர். திருவாரூர் - காரைக்கால் செல்லும் ரயிலை மறித்து 800 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மன்னார்குடியில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலை வர் எஸ்.தம்புசாமி, விவசாய சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் கே.ஆர். ஜோசப், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ஆறு.பிரகாஷ், விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி ஜி.கோவிந்தராஜன் ஆகியோர் தலைமையில் 300 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீடாமங்கலத்தில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்திற்கு தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் கே.சுப்பிரமணி யன், விவசாயிகள் சங்க மாவட்ட பொரு ளாளர் கே.ராவணன் ஆகியோர் தலை மையில் நடைபெற்ற போராட்டத்தில் 200 பேர் கலந்து கொண்டனர்.
திருச்சிராப்பள்ளி
திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்க (சிபிஎம்) புறநகர் மாவட்டச் செயலாளர் நடராஜன், (சிபிஐ) மாநகர் மாவட்டச் செயலாளர் அயிலை சிவசூரி யன் தலைமையில் ஊர்வலமாக வந்து ஜங்சன் ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். அப்போது போலீசார் அவர் களை தடுத்து நிறுத்தினர். அதனை யடுத்து அவர்கள் ரயில் நிலையம் முன்பாக சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தை தமிழ்நாடு விவசாயி கள் சங்க (சிபிஎம்) மாநில துணைச் செய லாளர் கே.முகமதுஅலி, (சிபிஐ) இந்திர ஜித் ஆகியோர் துவக்கி வைத்து பேசி னர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க (சிபிஎம்) மாநகர் மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன், புறநகர் மாவட்டத் தலைவர் சிதம்பரம் உள்ளிட்ட பலர் பங்கேற்ற இப்போராட்டத்தில் 100 பேர் கைதாகினர்.
கும்பகோணம்
கும்பகோணத்தில் இருந்து சென்னை சென்ற சோழன் ரயிலை மறித்து போராட்டம் நடத்தினர். போராட்டத் திற்கு (சிபிஎம்) தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் காதர் உசேன், விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலக் குழு உறுப்பி னர் நாகராஜன், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் அருளரசன், (சிபிஐ) தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சாமு. தர்மராஜன் உள்ளிட்டோர் பங் கேற்றனர். போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளில் 30 பேர் கைது செய்யப் பட்டனர்.
ரயில் மறியல் போராட்டத்தை ஆத ரித்து சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், செயற்குழு உறுப்பினர் மனோகரன், கும்பகோணம் நகரச் செயலாளர் செந்தில்குமார், சிபிஐ மாவட்டச் செயலாளர் மு.ஆ பாரதி, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் தில்லை வனம் உள்ளிட்டோர் பேசினர்.
அறந்தாங்கி
புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கி ரயில்வே நிலைய முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செய லாளர்கள் தென்றல் கருப்பையா, குமார் தலைமை வகித்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.சங்கர், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பொன்னுச்சாமி, மாவட்டச் செயலாளர் ஏ.இராமையன், தமிழ்நாடு விவசாய சங்க தேசிய குழு உறுப்பினர் மாதவன், சிபிஐ மாவட்ட துணைச் செய லாளர் ஏ.ராஜேந்திரன் ஆகியோர் பேசி னர்.
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற மறி யல் போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் வி.சுப்பிர மணியன் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து, விச மாவட்ட தலைவர் எம்.என்.அம்பிகாபதி, மாவட்டச் செயலாளர் கே.சித்தார்த்தன் மற்றும் சிபிஐ உறுப்பினர்கள் பங்கேற் றனர். போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டோரை காவல்துறை கைது செய்தது.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாப்படுகையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.துரைராஜ், மாவட்டத் தலைவர் ஆர்.ராதா கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடை பெற்றது.
கண்டன முழக்கங்களை எழுப்பிய வாறு ரயில் பாதையில் அமர்ந்து போராட் டத்தில் ஈடுபட்ட நிலையில், காவல்துறை யினர் கயிறுகளை கட்டி போராட்டத்தை தடுக்க முயன்றனர். இதை முறியடித்து சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற சோழன் விரைவு ரயிலை மறித்து 200-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தை நடத்தினர்.
விவசாயிகள் சங்கத்தின் போராட் டத்திற்கு ஆதரவளித்து மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் பி.சீனிவா சன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலை வர் டி.சிம்சன் உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.
சீர்காழி
சீர்காழியில் விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பி.வீரராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பொருளா ளர் எம்.செல்லப்பன் ஆகியோர் தலை மையில் சோழன் விரைவு ரயிலை ஏராள மானோர் மறித்து போராட்டத்தில் ஈடு பட்டனர்.
இப்போராட்டங்களில் சிபிஎம், சிபிஐ விவசாய சங்கங்களின் மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளை உறுப்பினர்கள் ஏராள மானோர் கலந்து கொண்டனர்.