districts

பொதுமக்களின் தொடர் எதிர்ப்பால் தனியார் நிறுவன தொலைபேசி கோபுர கட்டுமானங்கள் முற்றிலும் அகற்றம்

திருவாரூர், மே 4 - திருவாரூர் நகராட்சி 7 ஆவது வார்டுக்கு  உட்பட்ட ஸ்ரீதேவி நகரில் 2 ஆண்டுகளுக்கு முன்பு தொலைபேசி உயர் கோபுரம் அமைப்ப தற்கான கட்டுமானப் பணிகள் துவக்கப்பட் டன. மக்கள் வசிக்கும் பகுதியில் சட்ட விதி களுக்குப் புறம்பாக தொலைபேசி கோபுரம் அமைப்பதற்கு அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலை யில் தனியார் நிறுவனம் போராடிய பொது மக்கள் மீது காவல்துறையில் புகார் கொடுத்து விட்டு கட்டுமானப் பணிகளை தொடர்ந்துள்ள னர்.  போராடிய பொதுமக்கள் தரப்பில் இப்பிரச் சனை தொடர்பாக மாவட்ட ஆட்சியர், சட்ட மன்ற உறுப்பினர், வருவாய் கோட்டாட்சியர் என பல்வேறு அதிகாரிகளிடமும் மனு அளித்து வந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டன. தனியார் நிறுவனம் தொலைபேசி கோபுரம் அமைப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், செவ்வாயன்று அந்த தொலைபேசி கோபுர கட்டுமானங்கள் முற்றிலுமாக அப்புறப்படுத் தப்பட்டன.  இது தொடர்பாக 7 ஆவது வார்டு நகர்மன்ற  உறுப்பினர் ஜி.வரதராஜன் கூறுகையில், இந்தப் பிரச்சனையில் உடனிருந்த பொது மக்கள், அதிகாரிகள், காவல்துறையினர், வழக்கறிஞர்கள், மாவட்ட ஆட்சியர், சட்ட மன்ற உறுப்பினர், திமுக நகரச் செயலாளர் வாரை எஸ்.பிரகாஷ், மாவட்ட ஊராட்சி துணைத்  தலைவர் கலியபெருமாள் மற்றும் பத்திரிகை  நண்பர்களுக்கு நன்றி தெரிவித்தார்.