திருவாரூர், ஜூலை 19 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரு வாரூர் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் திருவாரூர் நேதாஜி சாலையில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நடை பெற்றது. ஒன்றியக்குழு உறுப்பினர் கே.ராஜாங்கம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் பேசினார். பின்னர் ஒன்றியச் செயலாளர் என்.இடும்பையன் கூறுகையில், திருவாரூர் ஒன்றி யம் மாவூரில் கடைத்தெரு அருகில் உள்ள ஆற்றங்கரையில் ஒரு டாஸ்மாக் கடை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. திருவா ரூர் - திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ள இக்கடையில் குடித்து விட்டு வரும் பலர் சாலையில் அமர்ந்து கொண்டும், நின்று கொண்டும், நான்கு சக்கர-இரு சக்கர வாகனங்களில் செல்வோ ருக்கும், நடந்து செல்பவர்களுக்கும், குறிப்பாக, பெண்களுக்கும் இடையூறு செய் கின்றனர். பல நேரங்களில் சண்டை சச்சர வுகளும் ஏற்படுகிறது. இது தொடர்பாக கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி பலமுறை வலியுறுத்தியும் இதுவரை மாற்றப் படாமல் உள்ளது. மாவட்டத்தில் இயங்கும் டாஸ்மாக் கடை களுக்கு அருகில் பார் வைப்பதற்கு, லை சென்ஸ் இல்லாமல் அனுமதி கொடுப்பது. டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மது பானங்களுக்கு விற்பனை அடிப்படையில், ஒரு லட்சத்திற்கு ரூ.3500 என்கிற வீதத்தில், மாதந்தோறும் புரோக்கர்கள் மூலம் கடை மேற்பார்வையாளர்களிடம் வசூல் செய்து மாதத்திற்கு ரூ.15 லட்சத்திற்கு மேல் லஞ்சம் பெறுகிறார். இத்தகைய முறைகேடான செயல்களில் ஈடுபடும் திருவாரூர் மாவட்ட டாஸ்மாக் மேலா ளரை கண்டித்தும், அவரை உடனடியாக இடமாற்றம் செய்யக் கோரியும், கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் எனக் கோரியும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி விளமல் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.