திருவாரூர், பிப்.6- திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம், புலவர் நத்தம் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது. வலங்கைமான் ஒன்றி யம் புலவர் நத்தம் கிரா மத்தில் 1956 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி உள் ளது. இப்பள்ளி கட்டிடங்கள் சேதமடைந்ததை அடுத்து கடந்த ஜனவரி 6-01-2023 அன்று அரசின் உத்தரவுப்படி இடிக்கப்பட்டது. இதன் பின் னர் தற்காலிகமாக அருகில் உள்ள இ சேவை மையத்தில் ஆதி திராவிடர் நல பள்ளி மாணவர்கள் சுமார் 48 பேர் தொடர்ந்து கல்வி கற்று வரு கின்றனர். இ சேவை மையத்தில் தற்போது கட்டடத்தின் கீழ்த் தளம் உடைந்து சமமாக இல்லாமல் ஏற்ற இறக்கமாக உள்ள இந்தக் கட்டிடத்தில் தரையில் அமர்ந்து மாண வர்கள் கல்வி பயின்று வரு கின்றனர். மேலும் போதிய கழிவறை இல்லை மற்றும் அருகிலே திறந்தவெளி குளம் உள்ளது. இதனை குறிப்பிட்டு கடந்த ஆண்டு ஜூலை 14ஆம் தேதி தீக்கதிரில் மாணவர் களின் நலன் கருதி இப்பள் ளிக்கு உடனடியாக கட்டிடம் கட்ட வேண்டும் என அப் பகுதி மக்களின் கோரிக்கை யுடன் உடனடியாக கட்டிடம் துவங்க வேண்டும் என விரி வாக செய்தி வெளியிடப்பட்டது. எனவே, இப்பள்ளிக்கு உடனடியாக புதிய பள்ளி கட்டிடம் கட்ட உரிய நிதி ஒதுக்கி புலவர் நத்தம் கிரா மத்தில் ஆதிதிராவிடர் நலப் பள்ளிக்கான புதிய பள்ளி கட்டடத்தை கட்ட உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீயிடம் சிபிஎம் மாவட்டச் செயலா ளர் ஜி.சுந்தரமூர்த்தி மனு அளித்தார். நிகழ்வின்போது, மாவட் டச் செயற்குழு உறுப்பினர் எம்.சேகர், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.தம்புசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.