ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் திருவாரூர் மாவட்டத்தில் கட்டப்பட்ட குடியிருப்பு வீடுகளுக்கான சாவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.காயத்ரி கிருட்டிணன், சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் ஆகியோர் வழங்கினர். திருவாருர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட ஊராட்சித் தலைவர் கோ. பாலசுப்ரமணியன், மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம், ஆசிய வளர்ச்சி வங்கி சமூக மேம்பாட்டு ஆலோசகர் த.ராஜ்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.