districts

30 ஆண்டுகளாக மறுக்கப்படும் பட்டா மாவட்ட ஆட்சியரிடம் மாதர்கள் மனு

திருவாரூர், நவ.17- திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி ஒன்றி யத்தில் உள்ள கொத்த மங்கலம்-பள்ளங்கோவில் பகுதியில் வசிக்கும் மக்க ளின் பல்வேறு கோரிக்கை களை நிறைவேற்ற கோரி  மாதர் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்  தனர். பள்ளங்கோவில் பகுதி யில் வசிக்கும் மக்களின் நீண்டநாள் கோரிக்கையான 30 ஆண்டு காலமாக குடி யிருக்கும் வீடுகளுக்கு பட்டா  வழங்க வேண்டும், 100 நாள் வேலையைத் தொடர்ந்து வழங்க வேண்டும், சட்டக் கூலியை காலதாமதமின்றி வழங்க வேண்டும். ரேஷன் கடை யில் பொருள் வாங்கும் குடும்ப அட்டை என்,பி, ஹச்,ஹச். என உள்ள குறி யீடை வறுமை கோட்டின்   அடிப்படையில் அரிசி மற் றும் மன்னனை மற்றும் அரசு நலத்திட்டங்களைப் பெறும் வகையில் குடும்ப அட்டை யை பி,ஹச்,ஹச்.என மாற்றித் தர வேண்டும் என வலியுறுத்தி மாவட்டச்  செயலாளர் பி.கோமதி, தலைவர் எஸ்.பவானி, மாவட்டப் பொருளாளர் ஆர். சுமதி ஆகியோர் மாவட்ட வருவாய் ஆய்வாளரிடம் மனு அளித்தனர்.