districts

img

அதிமுக-விலிருந்து விலகி 20 குடும்பங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர்

மன்னார்குடி, ஜூலை 13 - திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியம் மகாதேவப்பட்டினம் மேலப் பேட்டையில் உள்ள 20 குடும்பங் கள் அதிமுக-விலிருந்து விலகி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில்  மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி முன்னிலையில், ஆர்.செந்தில்  தலைமையில் இணைந்தனர்.  அவர்கள் அனைவருக்கும் ஜி. சுந்தரமூர்த்தி செந்துண்டு அணி வித்து வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் மன்னார்குடி ஒன்றியச் செயலாளர் கே.ஜெயபால் தலைமை வகித்தார். புதிதாக இணைந்த குடும்பங்களை மாவட்ட செயற்குழு உறுப்பினர் குமாரராஜா, மன்னார்குடி நகர செய லாளர் ஜி.தாயுமானவன், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் ஜி. ரெகுபதி, விவசாயிகள் சங்க ஒன்றி யத் தலைவர் எல்.சுப்பிரமணியன், விவசாயிகள் சங்க மன்னார்குடி பொருளாளர் ஜி.முத்துகிருஷ்ணன், வாலிபர் சங்க ஒன்றியச் செயலா ளர் டி.கேசவராஜ் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். இறுதியாக மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி புதிதாக கட்சியில் இணைந்த வர்களை வாழ்த்தினார்.